12/21/2020
EELAM CLUB
FOUNDER OF EELAM CLUB
நான் சசி முருகேசு,யாழை பிறப்பிடமாகவும் வன்னி,வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட யாழ்/பல்கலைக் கழகத்தின் பழைய மாணவி. நான் வாழ்ந்த சூழல் மிகவும் இன்னல்கள் நிறைந்தது. மாறி மாறிய இடப்பெயர்வுகள் ,வீடு மற்றும் சொத்துக்கள் முற்று மழுதாக அழிந்து இராணுவ ஆக்கிரமிப்பில்,உணவு, மருந்துபொருட்களுக்கு பொருளாதார தடை,குடும்ப உறவுகள், நண்பர்களின் உயிர் இழப்பு, கல்வி கற்க பாடசாலை இல்லை.உயர் கல்வி வெட்டுப்புள்ளி ஏற்றத்தழ்வு மற்றும் நான் வன்னியில் வாழ்ந்ததனால் வன்னியில் நிலவிய பொருளாதார போக்குவரத்து தடை,இயற்கை அனர்த்தம்,நோய்தொற்று,மருத்துவப்ற்றாக்குறை என வாழக்கையின் 30 வருடம்.
இருந்தும்,
நான் சார்ந்த யாழ் பல்கலைக்கழக கல்விச்சமூகம் தமிழ் தேசிய இன விடுதலைக்காகவும் வடகிழக்கி கல்வி சார் பொருளாதாரத்திலும் தமது பங்களிப்பை,எப்போதும் திடகாத்திரமான செயற்பாட்டை துணிவுடன் கடந்த 40 வருடமாக முன்னெடுத்து வருகிறது.
2009 ஆண்டிற்கு முன்னரும் பின்னரும் வடகிழக்கு கல்வி சமூகம் புலன் பெயர் நாடுகளில் இருந்து இன விடுதலைக்கு காத்திரமான பங்கை ஆற்றி வருகின்றது. அவ்வாறே நானும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எனது பல்கலைக்கழக நண்பர்கள், பாடசாலை நண்பர்கள் உறவினர்கள்,முகநூல் நண்பர்கள் மற்றும் உலகத்தமிழ் உறவுகளின் பங்களிப்போடு நாம் வடகிழக்கை நோக்கி வருகின்றோம் .
தமிழக,புலம்பெயர், மற்றும் உலகத்தமிழ் சமூகம் வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொண்டள்ளது. வடகிழக்கு மக்களின் பாரம்பரிய தொழில்,விவசாயம்,கடல் சார்,வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் துறைசார் வல்லுனர்களின் உதவியுடன் வடகிழக்கில் தனிநபர்,குடும்ப பொருளாதார வளர்ச்சியை நோக்காக கொண்டு Eelam club இயங்கிவருகின்றது.
CREATER A LIVING TRUST
சசி முருகேசு, நான் யாழ் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவி. சிறு வயதில் இருந்தே இன்னல்கள் போராட்டங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்து வந்துள்ளேன். மக்கள் எதிர் நோக்கிய இடப்பெயர்வுகள் அதனால் உண்டான விளைவுகள் அனைத்தையும் பார்த்தது மட்டுமன்றி அனுபவித்தும் இருந்துள்ளேன். 2009 வரை மாணவர்களாய் சேர்ந்து மக்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்தோம். இன்று உலகெங்கும் என்னைப் போல வடகிழக்கு மக்களின் நல்வாள்வில் அக்கறை கொண்ட உலக தமிழ் உறவுகள் இணைந்து Eelamclub-web bank ஊடாக மேற்கொண்டு வரும் சிறு சுய தொழிற்கடன்,மாணவர் கல்விக் கடன் மற்றும் நேரடி முதலீடுகள் எதிர்கால நம்பிக்கையை தருகின்றது.
நான் இலங்கையில் இருக்கும் போது எனக்கு இவ்வாறன ஒரு முயற்சி தோன்றவும் இல்லை தோன்றுவதற்கான சூழல் அமையவும் இல்லை. 2009 நாட்டை விட்டு இந்தியாவில் வாழ்ந்த காலப் பகுதியிலே EELAM CLUB என்னும் நிறுவனத்தை உருவாக்கும் எண்ணக் கரு மனதில் தோன்றியது. இருந்தும் நான் அமெரிக்கா வந்த பின்னரே இதற்கு முழுமையான செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.
Eelamclub இன் வளர்ச்சிக்கு உலக நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. எங்களுடைய இந்த ஒத்துழைப்பு வடகிழக்கு தமிழர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் ஊன்று கோலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. உலக நாடுகளில் வாழும் நாம் Eelamclub web bankல் செய்யும் முதலீடானது “அன்பளிப்பு அல்ல,” உங்கள் சேமிப்பு. உங்கள் முதலீடு பங்குப்பத்திரமாக அல்லது கடன் பத்திரமாக உங்கள் கையில் இருக்கும். உங்களுக்கு நிதித்தேவை ஏற்படும் போது Eelamclub விதியின் அடிப்படையில் நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேறு ஒருவருக்கு கை மாற்றிக்கொள்ளலாம் .
எனவே நீங்கள் Eelam club inc நிறுவனத்தில் மேற்கொள்ளும் முதலீடு சேவை நோக்குடன் கூடிய இலாப நோக்கில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு நேரடியாக நீண்ட குறுகிய கால வட்டி இல்லா,1% ,2% வட்டியுடன்,சிறு சுய தொழிலுக்கான மூலதனமாக,மூலதனக்கடனாக வழங்கப்படுவதுடன்,நேரடியாகவும் துறைசார் வல்லுனர்களுடன் இணைந்தும் பல்வேறு முதலீடுகளை தொடரும்.
Eelam club founders பங்களிப்பு நமது மக்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் மட்டுப்படுத்தப் பட்டதே, தேவைகள் பல கோடிகளில் நம்மிடம் ஒரு சில கோடிகள்,மீதி கோடிகள் உலகத்தமிழர் கையில், இணைவோம் நாம் தமிழராய் கட்டி ஏழுப்புவோம் ஆரோக்கியமான தமிழர் பொருளாதாரத்தை.
HOW IT IS WORK
Eelam Club uses technology operate a web bank at 100 times lower cost then traditional bank loan programs. Passing the saving on to borrowers in the form of lower rates or no interest and to investors in the form of solid returns.By providing borrowers with better rates and investors with attractive risk adjusted returns Eelam club has earned among the highest satisfaction ratings in the financial services industry.