24/08/2021
https://youtu.be/IxWqiVgWa68
கொவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் தேவை :- கொவிட் -19 தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதை மற்றும் பொய்யான கருத்துகளில் இருந்து விலகியிருப்போம். ஒரு கூட்டுச்செயற்பாடு ஊடாக வழமைக்கு திரும்புதல் செய்முறை. (WHO மற்றும் OUR WORLD LINE IN DATA அடிப்படையிலான ஒரு பார்வை.)
கடந்த இரண்டு வருடமாக கொவிட் 19 நோய்தொற்றுப்பரவல் எமது நாளாந்த வாழ்க்கைக்கு சவாலான விடமாக உள்ளது. உலகளாவிய ரீதியில் இன்றுவரை நாலு மில்லியனுக்கும் அதிகமான உயிர் இழப்பினையும், மூன்று மில்லியனுக்கு அதிகமான ஊழியப்படை உடைய வாழ்வாதாரத்தில் சவால் நிலையினையும், அனைவரது மனநிலையிலும் ஒரு பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையை மாற்றி வழமைக்குத் திரும்ப எம்மிடம் இப்போதைக்கு உள்ள ஒரே ஒரு வினைத்திறனான தொழில்நுட்பம் தடுப்பூசியே.
ஆனாலும் எங்களைச் சுற்றி கணிப்பிட முடியாத கட்டுக்கதைகளும் , வதந்திகளும் நிறையவே இருக்கிறதால அதைத் தாண்டி எங்களால் சிந்திக்க முடியவில்லை. 2020 ஆம் ஆண்டு WHO , " தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதை மற்றும் தவறான கருத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. இன்றுவரை உலகளாவிய ரீதியில் பல்வேறுபட்ட நாடுகளும் இதை முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும் நாங்கள் இன்னமும் பொய்யான செய்திகளுடனேயே வாழப்பழகிவிட்டோம்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொற்று நோயியல் நிபுணர் Antoine Flahault " தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் 60 -80 % வரையிலான நோய்ப்பரவலை தடுக்கமுடியும்" என கருத்துவெளியிட்டார்.
இதன் அடிப்படையில் 50 -80% இடைப்பட்ட மக்கள் தடுப்பூசியை பெற்ற நாடுகளுடன் ஒப்பீட்டளவில் நோக்கினால் கொவிட் தடுப்பூசியைப் முழுமையாகப் பெறாத அல்லது குறைந்தளவு (1- 25)%) பெறும் நாடுகளில் தொற்றுவீதமும் இறப்பு வீதமும் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் 25% மான மக்களே தடுப்பூசியைப் பெற்றிருப்பதாலும் அவர்கள் பெரும்பாலும் முப்பது வயதினைத் தாண்டியவர்களாக இருப்பதாலும் இளைஞர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவலாக இனங்காணப்படுகின்றது.
உலகிலேயே முழைமையாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாடு Gibraltar (116.3%) தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இங்கு கொவிட் தொற்றுப்பரவலின் வீச்சு சடுதியாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகள் அனைத்துமே Food and drug administration (உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் ) தரச்சான்றிதழ் பெற்றே அனுமதி பெறுகின்றன. நேற்றைய தினம் பைசர் வகை தடுப்பூசியை FDA பாதுகாப்பானது என உறுதிப்படுத்தியுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் உலகம் வழமைக்கு திரும்பும் வரை முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவது உட்பட்ட சுகாதார நடவடிக்கைகளைப் பேண வேண்டியது அவசியம் என CDC (நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம்) குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெறுவது என்பது ஒரு கூட்டுமுயற்சி ஒரு கூட்டாண்மை சமூகமாக சிந்தித்து செயற்பட வேண்டிய நேரம் இது.
உங்கள் பாதுகாப்பையும் ஏனையவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி சுகாதார ஆலோசனைகள் மற்றும் மாற்றுவழிகளைப் பற்றி சிந்தியுங்கள்.
கொவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியதன் தேவை :- கொவிட் -19 தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதை மற்றும் தவறான கருத்.....