Al Ihsaan Baithulmaal

Al Ihsaan Baithulmaal Main goal is to help people financially to avoid involving any form of interest (riba/vatti) and eliminate it from the grass root level.

இன்று ஜம்இய்யாவில்…
31/07/2026

இன்று ஜம்இய்யாவில்…

ஜம் இய்யா வளாகத்தில் …. இவ்வார ஜும்ஆ உரை
30/07/2026

ஜம் இய்யா வளாகத்தில் …. இவ்வார ஜும்ஆ உரை

21/07/2026
🪡 கணவனின் உரிமைகளும் மனைவியின் பொறுப்புகளும்:============================கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய நன்முறையிலா...
18/07/2026

🪡 கணவனின் உரிமைகளும் மனைவியின் பொறுப்புகளும்:
============================
கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய நன்முறையிலான குடும்ப நடாத்தல், குடியிருப்பு, ஆடை மற்றும் அவசியமான வாழ்வாதாரச் செலவுகள் (நபகா) போன்ற கடமைகளை அல்லாஹ் விதியாக்கியுள்ளான்.
அதேபோல, மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
உண்மையில், மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமையே மிக மகத்தானதும் முதன்மையானதும் ஆகும். ஆனால் இன்று, பல பெண்கள் இந்த உரிமையில் அலட்சியமாக இருக்கிறார்கள்; பெரும்பாலானோர் பெண்களின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு, கணவனின் உரிமைகளை மறந்துவிடுகிறார்கள்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் ஃபதாவாவில் குறிப்பிடுகிறார்கள்:
"ஒரு பெண் திருமணமானதும், அவளது பெற்றோரை விட அவளது கணவனுக்கே அவள் மீது அதிக அதிகாரம் உண்டாகிறது. மேலும், பெற்றோரை விட கணவனுக்குக் கட்டுப்படுவதே அவளுக்கு மிகக் கடமையானதாகும்."
ஆயினும், சில பெண்கள் தன் பெற்றோருக்குக் கட்டுப்படுவது போல கணவனுக்குக் கட்டுப்படாமல், அவனுக்கு மாறுசெய்து, பிடிவாதம் பிடித்து, அவனது அனுமதியின்றி வெளியே செல்கிறார்கள், அவன் (மார்க்க வரம்பிற்குள்) தடுத்தவைகளை அவன் வீட்டில் இல்லாத போது செய்கிறார்கள்.
உண்மையில் கணவனின் உரிமைதான் பெற்றோரை விடவும் மகத்தானது!
மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை, மிக மகத்தான உரிமைகளில் ஒன்றாகும். சொல்லப்போனால், அவள் மீது அவனுக்கு இருக்கும் உரிமையானது, அவன் மீது அவளுக்கு இருக்கும் உரிமையை விடப் பெரியதாகும்.
இதற்குப் பேரருளாளன் அல்லாஹ்வின் இந்த வசனமே சான்றாகும்:
"பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போலவே, அவர்களுக்கு நன்முறையிலான உரிமைகளும் (ஆண்களுக்கு அவர்கள் மீது) உண்டு. ஆயினும், ஆண்களுக்கு அவர்கள் மீது ஒரு அந்தஸ்து (உயர்வு) உண்டு." (அல்குர்ஆன் 2:228)
மனைவியை விட கணவனுக்கு இருக்கும் இந்த ஒரு படி அந்தஸ்து உயர்வு என்பது, அவனது சிறப்பைக் குறிப்பதோடு, அவளது கடமைகளை விட கணவனின் உரிமை மிக முக்கியமானது என்பதையும் உணர்த்துகிறது. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் ஆண்களுக்கு மனைவியர் மீது ஆக்கியுள்ள உரிமையின் மகத்துவத்தின் காரணமாக, மனிதர்களில் எவராவது ஒருவருக்கு ஸஜ்தா (சிரவணக்கம்) செய்யும்படி நான் கட்டளையிடுவதாக இருந்தால், பெண்கள் தங்களது கணவன்மார்களுக்கு ஸஜ்தா செய்யுமாறே கட்டளையிட்டிருப்பேன்."

(நூல்: அபூ தாவூத்: 2140, அல்பானி - ஸஹீஹ்)
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) வழியாக அறிவிக்கிறார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்வது தகாது. அவ்வாறு தகுமென்றிருந்தால், கணவனுக்கு மனைவி மீதுள்ள உரிமையின் மகத்துவத்திற்காக, அவளுக்குக் கட்டளையிட்டிருப்பேன்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் தன் ஐந்து வேளை தொழுகையைத் தொழுது, தன் ரமழான் மாத நோன்பையும் நோற்று, தன் கற்பையும் பாதுகாத்து, தன் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், அவளிடம் 'சொர்க்கத்தின் எந்த வாயில் வழியாக நீ விரும்புகிறாயோ அதன் வழியே நுழைந்து கொள்' எனக் கூறப்படும்."
(ஸஹீஹுல் ஜாமிஃ: 660)
இங்கு நபிகளார், கணவனுக்குக் கட்டுப்படுவதைத் தொழுகை, நோன்பு மற்றும் கற்பொழுக்கத்தோடு இணைத்துக் கூறி, அதைச் சொர்க்கம் நுழைவதற்கான ஒரு காரணமாக ஆக்கியுள்ளார்கள்.
ஒரு பெண்ணின் தந்தை, தாய் அல்லது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மரணித்தாலும் கூட, மூன்று நாட்களுக்கு மேல் அவள் துக்கம் அநுஷ்டிக்க (இத்தா இருக்க) மார்க்கத்தில் அனுமதியில்லை.
ஆனால், கணவன் மரணித்தால், அல்லாஹ்வின் வேதத்தின்படி நான்கு மாதங்களும் பத்து நாட்களும் அவள் துக்கம் அநுஷ்டிப்பது கடமையாகும் (இத்தா இருக்க வேண்டும்).
அக்காலத்தில் அவள் அலங்காரங்கள் செய்யவோ, அத்தியாவசியத் தேவையின்றி கணவனின் வீட்டை விட்டு வெளியேறவோ கூடாது. இதுவே, அவள் மீதுள்ள அவனது உரிமையின் மகத்துவத்திற்குச் சான்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் தன் கணவன் ஊரில் (சமூகமாக) இருக்கும் போது, அவனது அனுமதியின்றி (உபரியான) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதல்ல; மேலும் அவனது அனுமதியின்றி எவரையும் அவனது வீட்டிற்குள் அனுமதிக்கவும் கூடாது."
(நூல்: புகாரி, முஸ்லிம்)
மார்க்க அறிஞர்கள் (ஃபுகஹாக்கள்) குறிப்பிடுகையில்: கால அவகாசம் உள்ள ஒரு கடமையான நோன்பை (களா நோன்பு போன்றவற்றை) நோற்பதைத் தடுப்பதற்குக் கூட கணவனுக்கு உரிமையுண்டு, ஏனெனில் அவனது உரிமை முந்தினதாகும்.
இந்தக் காலத்தில், அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, கணவனின் உரிமைகளைப் பற்றி பேசுபவர்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. சமூக ஊடகங்கள் முழுவதும் "பெண்ணுரிமை", "பெண் சுதந்திரம் (Empowerment)" என்ற கோஷங்களால் நிறைந்துவிட்டன.
இதன் விளைவாக, சில பெண்கள் தங்கள் கணவன்மார்களின் உரிமைகளைப் புறக்கணித்து, அவற்றை மறந்தும் விட்டனர். இதனால் குடும்பங்களில் பிடிவாதமும், கணவனுக்கு மாறுசெய்வதும் (நுஷூஸ்) பெருகி, குடும்பங்கள் சிதைந்து, விவாகரத்துகள் (தலாக்) மலிந்துவிட்டன.
சில மனைவியர் எதையும் கொடுக்காமல் எல்லாவற்றையும் பெறவே நினைக்கிறார்கள்; தங்களின் உரிமைகளைப் பற்றிக் கேட்கும் அவர்கள், கடமைகளைச் செய்வதில்லை. கணவனை ஒரு வேலைக்காரனாகவோ அல்லது வாகன ஓட்டியாகவோ (டிரைவர்) மட்டுமே பார்க்கிறார்கள்.
முற்காலத்துச் சான்றோர்களின் (ஸலஃபுகளின்) பெண்கள் தங்கள் மகள்களுக்கு இப்படி அறிவுரை கூறுவார்கள்:
"நீ அவனுக்கு ஓர் அடிமைப் பெண்ணாக இரு; அவன் உனக்கு ஓர் உன்னத அடிமையாக மாறுவான்!"
ஆனால் நமது காலத்தில், பெண்கள் கணவனைத் தனக்குக் கீழ்ப்படிந்த ஒரு பிராணியாக ஆக்கவே விரும்புகிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அனைத்து நுஸுஸ்களும் (ஆதாரங்களும்) மென்மையான, இணக்கமான, அன்பான, அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும், கணவனை அரவணைக்கும் பெண்களையே சிலாகிக்கின்றன.
எந்தப் பெண் தன் கணவனை மென்மையோடும் ஞானத்தோடும் கையாள்வாளோ, அவன் அவள் மீது அளவற்ற அன்பு கொண்டு, அவளைத் தன் உயிராகத் தாங்குவான்.
அன்பான பெண் என்பவள் புயல் வீசும் போது வளைந்து கொடுக்கும் மரம் போன்றவள்; அவள் புத்திசாலி. ஆனால் பிடிவாதக்காரி என்பவள் காய்ந்த குச்சியைப் போன்றவள், அவள் நேராக நிற்பாள், இறுதியில் உடைந்து போவாள்; அவ்வாறு உடைந்தால் அவளை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: "சொர்க்கவாசிகளான உங்கள் பெண்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் கணவன் மீது அதிக அன்புடையவர்கள், அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள் மற்றும் (கணவனுக்கு) அதிகம் பணிந்து நடப்பவர்கள் ஆவர். அத்தகைய பெண், தனக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் (அல்லது கணவன் கோபித்துக் கொண்டாலும்), 'இதோ எனது கை உமது கையில் உள்ளது; நீர் திருப்தியடையும் வரை நான் தூங்க மாட்டேன்' என்று கூறுவாள்."
(நூல்: தாரகுத்னீ, தப்ரானி, அல்பானி - ஹஸன்)
அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு அல்குர்ஆனில், பெண்ணின் கணவனை அவளுக்கு "எஜமான்/தலைவன்" (ஸய்யித்) என்று பெயரிட்டழைக்கிறான்: "வாசலருகே அவளுடைய எஜமானரை (கணவரை) இருவரும் கண்டனர்." (சூரா யூஸுஃப்: 25). மேலும், "அவ்விருவரும் நம் நல்லடியார்களில் இருவருக்குக் கீழ் (மனைவியராக) இருந்தனர்" (சூரா தஹ்ரீம்: 10) என்றும் கூறுகிறான்.
தாபியீனான ஸயீத் பின் அல்-முஸய்யிப் (ரஹ்) அவர்களின் மனைவி கூறினாள்
"நீங்கள் உங்கள் ஆட்சியாளர்களிடம் பேசுவதைப் போலன்றி (அவ்வளவு கண்ணியமாக), 'அல்லாஹ் உங்களைச் சீர்படுத்துவானாக, அல்லாஹ் உங்களுக்குக் குணமளிப்பானாக' என்று மட்டுமே நாங்கள் எங்கள் கணவன்மார்களிடம் பேசுவோம்!"
(ஹில்யதுல் அவ்லியா: 5/168)
இவற்றைக் கேட்கும் போது சில பெண்கள், "கணவன்மார்கள் அடிக்கிறார்கள், மதிப்பதில்லை, கொடுமைப்படுத்துகிறார்கள்..." என்று உடனே வாதிட வருவார்கள்.
அத்தகைய தவறான செயல்களை நாம் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை; அறிவுள்ள எந்தவொரு முஸ்லிமும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவெனில்: அவன் அடிப்பதற்கும், மனைவியைச் சீண்டுவதற்கும் எது காரணமாக அமைந்தது?
அவளது பிடிவாதமும், கணவனுக்கு மாறுசெய்வதும், அவனுக்குக் கட்டுப்படாமல் போனதும் அல்லவா?! ஏனெனில், அவள் அவனை அடிமையாக்க நினைக்கிறாளே தவிர, அவனுக்கு இணக்கமாக இருக்க விரும்புவதில்லை. அவள் செய்ய வேண்டிய கடமையே பெரியது என்பதை அவள் உணர்வதில்லை.
சில பெண்கள், கணவனின் உரிமைகளைப் பற்றி யாராவது பேசக் கேட்டால், உடனே குரலை உயர்த்தி "அப்படியென்றால் எங்களின் உரிமைகள் எங்கே?!" என்று கேட்பார்கள்.
யார் இந்த மனோபாவத்தோடும் சிந்தனையோடும் இருக்கிறாளோ, அவள் தன் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்தவள் ஆவாள். ஏனெனில், அவள் முதலில் அவனைக் கட்டிப்போட்டு, அடிமையாக்கிவிட்டு, அதன் பிறகு அவனுக்குக் கட்டுப்பட்டு கடமைகளைச் செய்ய நினைக்கிறாள் (அது சாத்தியமற்றது).
கணவனுக்குக் கட்டுப்படுவதையும், அவனது உரிமைகளையும் எதிர்க்கும் ஒரு பெண், உண்மையில் அல்லாஹ்வின் மார்க்க சட்டத்தையே எதிர்க்கிறாள். ஏனெனில், இந்த உரிமைகளை வகுத்து, அவளைக் கட்டுப்படுமாறு கட்டாயப்படுத்தியது அல்லாஹ்வே ஆவான்.
நான் மேலே குறிப்பிட்ட கணவனின் உரிமைகளும், அவனுக்குக் கட்டுப்படுவதும் பெண்ணை இழிவுபடுத்துவதோ அல்லது அவளது அந்தஸ்தைக் குறைப்பதோ அல்ல. மாறாக, அவள் ஒவ்வொரு கண்ணியமான ஆணின் தலைமீது இருக்கும் கிரீடம் ஆவாள். கண்ணியமானவனே பெண்களைக் கண்ணியப்படுத்துவான்; இழிவானவனே பெண்களை இழிவுபடுத்துவான்!
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அருமை மகள் ஃபாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்கள், தன் கணவர் அலி (ரழி) அவர்களுக்குப் பணிவிடை செய்தார்கள்.
தண்ணீர்ப் பையைத் தூக்கித் தூக்கி அவர்களது மார்பில் தழும்பு ஏற்பட்டது; மாவு அரைக்கும் இயந்திரத்தைச் சுற்றிச் சுற்றி அவர்களது கைகள் காய்த்துப் போயின; வீட்டைப் பெருக்கிப் பெருக்கி அவர்களது ஆடைகள் தூசியடைந்தன; அடுப்பில் நெருப்பு மூட்டி மூட்டி அவர்களது ஆடைகள் கரியடைந்தன; இதனால் அவர்களுக்குக் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டன.
கணவனுக்குப் பணிவிடை செய்வது மனைவிக்குக் கடமையாக இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அவளுக்கு அதைத் தடுத்து, அவளது சிரமத்தை நீக்கியிருப்பார்கள் (ஆனால் நபிகளார் அவ்வாறு செய்யவில்லை).
கலாநிதி அஷ்ஷேய்க் ஹுஸைன் பைஃபீ
அவர்களது தொகுப்பு!!

ஜம்இய்யாவில் இவ்வார ஜும்ஆ மற்றும் பெண்கள் பயான்
16/07/2026

ஜம்இய்யாவில் இவ்வார ஜும்ஆ மற்றும் பெண்கள் பயான்

Address

Jameyyathuth Tharbiyyathil Islamiyya
Addalachenai
32350

Telephone

+94771587700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsaan Baithulmaal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share