வலிகள்

வலிகள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from வலிகள், No. 41, Rajarajan Street, Tiruvannamalai.

21/01/2018
30/11/2014

குடியை கெடுக்குற குடிக்கு ஏ.சி பார் , பள்ளிக்கூடத்து ஓட்ட அன்னாந்து பாரு, சாலைகளில் வெள்ளம், அரசியல்வாதி மனசெல்லாம் கள்ளம், கண்ணீர் விடுபவன் விவசாயி தண்ணீர் இல்லாமல் தவிப்பவனும் விவசாயி ஆ ஆ ஆ பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் தமிழ்நாடு

முகநூல் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் பணிபுரியும் பொறியியல் கல்லூரியை பற்றியது இந்த பதிவை முடிந்தவரை பரப்புங்கள் பகி...
11/01/2014

முகநூல் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் பணிபுரியும் பொறியியல் கல்லூரியை பற்றியது இந்த பதிவை முடிந்தவரை பரப்புங்கள் பகிருங்கள். பொறியியல் என்பது பலருக்கு எட்டாக்கனியாக இருக்கின்ற இந்த காலத்தில் எங்கள் கல்லூரியை பற்றி கூறிக்கொள்வதில் நான் பெருமைபடுகிறேன் .எங்கள் கல்லூரியின் பெயர் அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி எங்கள் கல்லூரியில் SC / ST மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் முற்றிலும் இலவசம் மற்றும் ஒரு குடும்பத்தில் முதல் முறை கல்லூரியில் டிகிரி படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு ( first graduate ) அரசுதரும் முழு உதவித்தொகையும் (20000)அளிக்கப்படுகிறது எங்கள் கல்லூரியில் நன்கொடை பெறப்படுவதில்லை. எங்கள் கல்லூரியில் அரசு நிர்ணயிக்கும் கல்வித்தொகை (45000)மட்டுமே பெறப்படுகிறது அதிலும் அவர்களுக்கு பாதித்தொகை அரசு கொடுக்கும் உதவித்தொகை (20000) மூலம் அளிக்கப்படுகிறது முகநூல் நண்பர்கள் தயவுசெய்து பகிருங்கள் "அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது" எனவே இதை பகிருங்கள் முடிந்தவரை மட்டவர்களுடைய கல்விக்கு உதவுங்கள். தொடர்புக்கு வினோத் 9677518588 கல்லூரி முகவரி அண்ணாமலையார் பொறியியல் கல்லூரி , போளூர் டு தேவிகாபுரம் செல்லும் சாலை, திருவண்ணாமலை

03/06/2013

நன்றி தோழர்களே நம்முடைய பக்கத்தை விரும்பியர் எண்ணிக்கை இருநூறை தொட்டுவிட்டது. இந்த பக்கத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களால் முடிந்தவரை நம் பக்கத்தில் வெளியாகும் படிக்கமுடியாத மாணவர்களுக்கு உதவுங்கள் "அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது" உங்கள் பகுதியில் உள்ள படிக்க வசதியில்லாத மாணவர்கள் இருந்தால் நம் பக்கத்தில் பதிவிடவும் அதை பார்க்கும் யாராவது ஒருவர் அவர்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உணவளிப்பதும் எழுத்தரிவிப்பதும் கடமையாக கொண்டு செயலாற்றுவோம் வாருங்கள் நட்புகளே என்றும் வலிகளுடன் வினோத்

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாரிசு முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ...
31/05/2013

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாரிசு
முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும் ஏழை. பொறியியல் படிப்புக்கு அவரது தகுதி மதிப்பெண் 1,130 / 1,200. இவரை தொடர்புகொள்ள 96005 67640

தோழர்கள் கண்டிப்பாக உதவவும் அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது தயவுசெய்து உதவுங்கள...
30/05/2013

தோழர்கள் கண்டிப்பாக உதவவும் அன்னசத்திரம் ஆயிரம் கட்டுதலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது தயவுசெய்து உதவுங்கள்
சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி அடைந்தவர்கள், அடுத்து என்னப் படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ச்சி அடையாதவர்கள் உடனடி மறு தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வறுமைக்கோட்டின் விளிம்பில் வாழக்கூடிய ஒரு கிராமத்து ஏழை மாணவி, ப்ளஸ் டூ தேர்வில் 1,129 மதிப்பெண் பெற்று, 'மேல்படிப்பு படிக்கவைக்க பெற்றோர்களால் முடியாது' என்பதை உணர்ந்து, தன் தாயோடு 100 நாள் திட்டத்தின்கீழ் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருகிறார்.

அந்த மாணவியின் பெயர் காயத்ரி. அவர், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் - ஆனங்கூர் அருகே உள்ள சின்னமருதூர் கிராமம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர். ப்ளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 179, ஆங்கிலம் 164, கணிதம் 197, வேதியல் 198, இயற்பியல் 192, உயிரியல் 199 மொத்த மதிப்பெண் 1,129. இவரைச் சந்திக்க அந்தக் கிராமத்துக்குச் சென்றேன்.

ஆனங்கூரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். அந்த கிராமத்துக்கு மினி பஸ் வசதிகூட கிடையாது. மாலை 4 மணிக்கு காயத்ரி வீட்டுக்கு சென்றேன். பார்க்கவே பரிதாபமான குடும்பம். அரசு கொடுத்த தொகுப்பு வீட்டில் இருக்கிறார்கள். நான் போனபோதுதான் வேலையில் இருந்து திரும்பி வந்து வெளியில் உட்கார்ந்து குடும்பமே கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காயத்ரியிடம் பேசினேன். "எங்க அப்பா பேரு செல்வராஜ், அம்மா சுமதி. எனக்கு தமிழ்செல்வி, தேவிபிரியா என இரண்டு தங்கைகள். ஜீவா ஒரு தம்பி. அப்பா, அம்மா கூலி வேலை. அவுங்களுக்கு எழுத படிக்கவெல்லாம் தெரியாது. நான் பத்தாம் வகுப்பு ஆனங்கூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 470 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கவைக்க எங்க வீட்டில் கொஞ்சம்கூட வசதி கிடையாது. அதனால் அம்மாகூட காட்டு வேலைக்கு போயிட்டு இருந்தேன். எங்க ஸ்கூல் வாத்தியார் வீட்டுக்கு வந்து என்னை ஃபிரீயா பரமத்தி வேலூரில் உள்ள மலர் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். இலவச பஸ் பாஸூம் வாங்கி கொடுத்தாங்க. அதனால் தான் ப்ளஸ் டூ படிக்க முடிந்தது.
எங்க வீடு தொகுப்பு வீடு. வீட்டுக்குள் படுப்பதற்கே இடம் பத்தாது. ஒரே ஒரு குண்டு பல்ப்தான் எரியும். அப்பா, அம்மா வேலைக்கு போயிட்டு வந்து வீட்டிலும் வேலை செஞ்சுட்டு கொஞ்ச நேரம்தான் தூங்குவாங்க. அப்போது, நான் வீட்டுல லைட்டை போட்டு படிச்சுட்டு இருந்தால் அவுங்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், நான் பெரும்பாலும் தெரு கம்பம் வெளிச்சத்தில்தான் உக்கார்ந்து படிப்பேன்.

பேய் மாதிரி தெருவில் உக்கார்ந்துட்டு இருக்கன்னுகூட சிலர் திட்டுவாங்க. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் போர்வையை போர்த்திக்கொண்டு தெருவிலேயே இரவு 12 மணி வரை படிப்பேன். எனக்காக எங்க அப்பாவும் என் கூடவே கட்டிலை போட்டு படுத்திருப்பார். இப்ப 1,129 மார்க் வாங்கி இருக்கேன். கட் ஆஃப் மார்க் 197. மருத்துவம் படித்து அனைவருக்கும் சேவை செய்யணும் என்பதுதான் என்னோட ஆசை. ஆனால், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். அப்படி இருக்கும்போது எப்படி மேற்கொண்டு படிக்க முடியுமா? என்பது தெரியவில்லை" என்றார் பரிதாபமாக.

காயத்ரி அப்பா செல்வராஜ், "எனக்கு படிப்பை பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது. என் தம்பிக்குதான் தெரியும். அவன் ரெண்டாம் கிளாஸ் வரை படிச்சிருக்கான். கையெழுத்தெல்லாம் சூப்பரா போடுவான். அவனுக்குதான் இந்தப் படிப்பை பற்றியெல்லாம் தெரியும். நாங்க அருந்ததியர் சமூகம். எங்களால் பெரிய படிப்பெல்லாம் படிக்கவைக்க முடியாது. நாங்க கூலி வேலை செஞ்சு இவங்களுக்கு கஞ்சி ஊற்றுவதே சிரம்மமாக இருக்கு. யாராவது நல்ல மகராஜன் உதவி செய்தால் பிள்ளை படிச்சுக்கும்" என்றார்.

அம்மா சுமதி, "சார், எங்க பிள்ளைகளுக்காக நாங்க ஒரு நல்ல துணி, மணி போட்டது கிடையாது. ஒரு நல்ல சோறு ஆக்கியது கிடையாது. இப்ப மழையும் இல்லாததால் கூலி வேலையும் கிடைக்கல. நூறு நாள் வேலைக்குதான் போயிட்டு இருக்கிறோம். அடுத்த நேரம் சாப்பாட்டுக்கே குதிரைக் கொம்பா இருக்கு. நிறையா பேர் வந்து என் பிள்ளையை பாராட்டிட்டு போறாங்க. பெருமையாக இருக்கு. ஆனால் மேற்கொண்டு படிக்கவைக்க கையில் ஒரு பைசா கூட கிடையாது. எல்லா பாரத்தையும் இந்த மதுரை வீரன் மேலதான் போட்டிருக்கிறேன்" என்றார்.

காயத்ரியின் கட்ஆஃப் மதிப்பெண்ணுக்கு, இடஒதுக்கீட்டின்கீழ் டாக்டர் சீட் கிடைப்பது நிச்சயம். ஆனால், அவரைத் தொடர்ந்து படிக்கவைப்பது என்பது அவர்களது பெற்றோர்களால் சாத்தியம் இல்லை.



காய்த்ரியின் டாக்டர் கனவு மெய்ப்படுமா?



மாணவி காயத்ரியின் வங்கிக் கணக்கு:

Account holder's Name: GAYATHRI
Indian Bank Account Number: 6128812063
IFSC Code Number: IDIB000J024

அவர்களை தொடர்பு கொள்ள வேற வழியிருந்தால் தோழர்கள் தெரியப்படுத்தவும் நன்றி தினேஷ் குமார் மற்றும் கல்வி விகடன்

உதவுங்கள் உதவுங்கள் தயவுசெய்து உதவுங்கள்!!! கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் கல்வியில் சாதனை...தாழையூர் இலங்கை அகதி முகாமைச...
27/05/2013

உதவுங்கள் உதவுங்கள் தயவுசெய்து உதவுங்கள்!!!

கிளிநொச்சி மாணவன் தமிழகத்தில் கல்வியில் சாதனை...தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார்"
=================
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் எவ்வித நம்பிக்கைகள், எதிர்கால நிச்சயங்கள் இன்றி ஏராளமான ஈழத் தமிழ் அகதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்களுக்கே நம்பிக்கை ஒளி ஊட்டும் விதத்தில் கல்வியில் சாதனை படைத்திருக்கிறார் அருண்ராஜ்.

ஈழத் தமிழ் மக்கள் இனி வரும் காலங்களில் கல்வி ஒன்றால் தான் எங்களது பழைய நிலையை அடைய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார் இந்த மாணவர்.

தமிழ்நாட்டில் உள்ள 114 ஈழ அகதி முகாம்களில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தாழையூர் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த நாகேந்திரன் அருண்ராஜ் என்ற மாணவரே பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1127 என்ற அதிக மதிப்பெண்கள் வாங்கி சாதித்திருக்கின்றார். (இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் (A/L) பரீட்சையானது இந்தியாவில் பிளஸ் 2 (Plus 2) பரீட்சை என அழைக்கப்படுகின்றது.)

தாயகத்தில் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்ட அருண்ராஜ் இன் பெற்றோர் இலங்கையில் நிலவிய கடும் யுத்தம் காரணமாக தமிழகத்துக்கு 1990 களில் குடிபெயர்ந்தவர்கள். கஷ்டமான சூழ்நிலையில் அருண்ராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாமே அகதி முகாமில் தான்.

எப்படி உங்களது அசாத்திய வெற்றி சாத்தியமானது?

என்னோட அப்பா, அம்மா முதல் காரணம்… என்னுடைய அப்பா நீ படிச்சு பெரிய ஆளாக வர வேணும் அதிக மார்க் வாங்க வேண்டும் என்று எப்பவும் சொல்லுவார். அடுத்து என்னோட ஆசிரியர்கள்.. குறிப்பாக கலா மிஸ், சுபா மிஸ், மீனா மிஸ் இந்த மூன்று ஆசிரியர்களும் எனது கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்தார்கள். என்னுடைய நண்பர்களும் புரியாத பாடக்குறிப்புக்களை சொல்லிக் கொடுத்து உதவினார்கள். எனது உறவினர்களும் நிறைய உதவிகள் புரிந்து இருக்கின்றார்கள்.

முகாம் சூழல் உங்களுக்கு படிக்கக் கூடியதாக இருந்ததா?

வீட்டில் பொருளாதாரச் சூழல் தான் கஷ்டமாக இருந்தது… முகாமில ஒரு ரூம், ஒரு கோல் தான் இருக்கும்…. நான் படிக்கிற நேரங்களில வீட்டில் எந்த இடையூறும் பண்ண மாட்டார்கள்…. தொலைக்காட்சி எதுவும் போட மாட்டார்கள். அதனால் என்னால் நன்றாகப் படிக்க முடிந்தது.

அடுத்து மேற்படிப்பு என்ன படிக்கிறதா இருக்கிறீங்கள்?

இஞ்சினியரிங் படிக்கிறதா இருக்கிறேன்.. என்னோட ஆசை ஆர்வம் எல்லாமே மருத்துவருக்கு படிக்கிறது தான்… பொருளாதார கஷ்டம் டாக்டருக்கு படிக்க இடம் கொடுக்கல.. வருடத்துக்கு இரண்டரை இலட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவாகும் என்கிறார்கள். அதனால டாக்டருக்கு படிக்கிறதை என்னால் நினைச்சுக் கூட பார்க்க முடியல. என்னோட அப்பா சாதாரண கொத்தனார் வேலை பார்த்து தான் எங்களை இவ்வளவுக்கு படிப்பித்து இருக்கின்றார். நான் இப்ப இஞ்சினியரிங் படிக்கிறதுக்கே மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது.

பாடசாலையில் உங்களை எப்படி நடாத்தினார்கள்?

எனக்கு படிப்பித்த ஆசிரியர்களும் சரி மாணவர்களும் சரி என்னை ஒரு சகோதரனாய் தான் நடாத்தினார்கள். ஈழ அகதிமுகாம் மாணவன் என்று என்னை எந்த வேறுபாடும் காட்டாமல் வழி நடாத்தினார்கள். அதனால் தான் என்னால் இப்படி புள்ளிகளைப் பெற முடிந்தது.

உங்களது எதிர்கால திட்டங்கள் என்ன?

என்னுடைய மேற்படிப்பை நல்ல படியாக முடித்து என்னைப் போல் இந்த முகாம்களில் கஷ்டப்படும் மாணவர்கள் கல்வியில் முன்னிலை பெற நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

தேவகோட்டை தாளையடி அகதி முகாமில் அருண்ராஜ் உடன் சேர்த்து பிளஸ் 2 பரீட்சையில் திருச்செல்வம், மோகன், லாவண்யா, லூசியா, சிவநேசன், பேபிசாலினி, சசிகலா, அஜிந்தன் போன்ற மாணவர்களும் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இப்படி நம்பிக்கையோடு இருக்கும் தன்னம்பிக்கையுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது உலகெங்கும் பரந்து வாழும் மக்களின் கடமையாகும். தோழர்களே தயவுசெய்து உதவுங்கள் அனைவருக்கும் கல்வியளிப்பது நம் கடமை நம்மால் இயன்றதை கொடுத்து அந்த மாணவனை ஒரு தலை சிறந்த மருத்துவனாக்குவோம் நம் வலிகள் அமைப்பில் உள்ள அனைவரும் உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி தமிழீழ முகநூல் தமிழர்களின் குரல

21/05/2013

முகநூல் உறவுகளுக்கு என் நன்றிகள் நமது பக்கத்தை விரும்பியவர்கள் எண்ணிக்கை 120 ஐ அடைந்துள்ளது இவை அனைத்திற்கும் காரணம் நீங்களே இந்த வெற்றியை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் மேலும் நம் பக்கத்தை தயவுசெய்து அனைவருக்கும் பகிருங்கள் நட்புகளே இதன் மூலம் எங்காவது ஒருவர் கண்டிப்பாக படிப்பார் அதனால் பல வசதி இல்லாத மாணவர்கள் கண்டிப்பாக கல்வி கற்பார்கள் அடுத்த வேலை உணவுக்கு கஷ்டப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக உணவு கிடைக்கும் உங்கள் ஆதரவு மேலும் மேலும் எங்களுக்கு வேண்டும் என்றும் வலிகளுடன் உங்கள் தோழன் வினோத்

20/05/2013

முகநூல் நண்பர்கள் தயவு செய்து பகிரவும் உங்கள் பகுதிகளில் படிக்க வசதி இல்லாத சிறுவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்க வசதியில்லாத மாணவர்கள் இருந்தால் உடனே நமது பக்கத்தை அணுகவும் நம்மால் முடிந்தவரை உதவுவோம். நம் பக்கத்தை விரும்பியர் எண்ணிக்கை நூறை தொடப்போகிறது இவர்களில் ஒருவராவது அந்த மாணவர்களுக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன். மேலும் நம் பக்கத்தை பகிரவும் அனைவருக்கும் கல்வி மற்றும் உணவு இதுவே நம் லட்ச்சியம் நம்பிக்கையுடன் என்றும் வலிகளுடன் வினோத்

உதவி தேவை .. பகிருங்கள் நண்பர்களே... சேலம் : ரத்த புற்றுநோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிக்கு உதவ, கருணை ...
15/05/2013

உதவி தேவை .. பகிருங்கள் நண்பர்களே...

சேலம் : ரத்த புற்றுநோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிக்கு உதவ, கருணை உள்ளம் படைத்தவர்களின் உதவி தேவை ..

சேலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி மணி. இவருடைய மகள் தபீதா, 12.
திருவாக்கவுண்டனூர், செயின்ட் ஜோசப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்த தபீதாவுக்கு, நான்கு மாதங்களுக்கு முன், நெஞ்சின் இடப்பகுதி திடீரென வீக்கத்துடன் காணப்பட்டதோடு, காய்ச்சலும் உடன் சேர்ந்து வாட்டியது. "இருதயக் கோளாறாக இருக்கும்; பெங்களூரு நாராயண இருதயாலயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என, தனியார் மருத்துவமனையில் கூறினர். அங்கு பரிசோதனை செய்ததில், 2 லட்சம் ரூபாய் செலவானதோடு, டாக்டர்கள் கூறிய பதில், பெற்றோரை வேதனையடைய வைத்தது.

"ரத்தத்தில் உள்ள செல்கள் கெட்டு, புற்றுநோயாக உருமாறியுள்ளது. அந்த செல்களை மாற்றம் செய்தால் மட்டுமே, உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது. 20 முதல், 25 லட்சம் ரூபாய் வரை, செலவாகும். வேலூரில் உள்ள, சி.எம்.சி., தனியார் மருத்துவமனையில், ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் உள்ளன; முயற்சி செய்து பாருங்கள்' என, டாக்டர்கள் வட்டாரம், மாணவியின் பெற்றோரிடம் கூறியது.சி.எம்.சி.,யில், "இந்த சிகிச்சை முறையில் பணம் குறைக்க வாய்ப்பு கிடையாது' என, கூறி விட்டனர். இறுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், "ஹீமோதெரபி' முறையில் ரத்தத்தை சுத்தப்படுத்தி, உயிர் இழப்பை தள்ளிப் போடுவதற்கான முயற்சி மட்டும் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, மாணவி தபீதா, உடல் மெலிந்து, தலைமுடி இழந்து, பரிதாபக் கோலத்தில் கிடக்கிறார். மாணவிக்கு உதவ தாயும், அவருடைய உயிரை காப்பாற்ற தந்தையும் போராடி வருகின்றனர் ..

மாணவியின் உயிரை காக்க விரும்பும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் : 93452 - 20392, 95977 - 25161 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம். நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ்

முகநூல் தோழர்களுக்கு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில்  உள்ள நண்பர்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள பள்ளி...
14/05/2013

முகநூல் தோழர்களுக்கு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள நண்பர்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வகுப்பெடுக்க ஆசிரியர் தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் வினோத் 9677518588

இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு அந்த தமிழ்நாட்டின் சிறந்த மாவட்டம் திருவண்ணமலையில் அரங்கேறிய சம்பவம். இன்று மாலை ஒர...
10/05/2013

இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு அந்த தமிழ்நாட்டின் சிறந்த மாவட்டம் திருவண்ணமலையில் அரங்கேறிய சம்பவம். இன்று மாலை ஒரு 7 மணியளவில் நானும் என் தோழர் ஒருவரும் அவருடைய குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகம் சென்றிருந்தோம் அப்பொழுது அந்த மருந்தகத்தின் வாசலில் தன்னை மறந்த நிலையில் குடிபோதையில் ஒரு இந்தியக்குடிமகன் கிழே விழுந்திருந்தார். தன் தாயின் மருத்துவ செலவிர்க்கோ அல்லது மனைவிக்கோ மற்றும் குழந்தையின் படிப்புசெலவுக்கோ தான் சம்பாதித்த பணத்தை செலவிடாமல் தன் ஒருவன் சுயநலத்திற்கே செலவுசெய்துகொள்ளும் இவனை போன்ற மிருகங்கள் வாழ்வதைவிட இறப்பதே மேல் ஒரு கோட்டேர் பீராந்திக்கும் பணத்துக்கும் தன்னைமட்டும் அல்லாமல் தவறாக ஓட்டளித்து தன்னை சர்ந்த்தவர்களையும் வேதனைபடுத்தும் இவனை போன்ற சுயநலவாதிகள் தூக்கில் இடப்படவேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக்கின் நிகர வருமானம் 18081.16 கோடி. அரசு மதுக்கடைகளைக் கையகப்படுத்தியபின் டாஸ்மாக்கின் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவிகித அளவில் அதிகரித்து வந்துள்ளது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1983 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருவாய் 183 கோடி ரூபாயாக இருந்தது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3499.75 கோடி. இதில் அரசுக்குக் கிட்டிய வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003-04 நிதியாண்டிற்கான வரி வருவாய் 3,639 கோடியாக உயர்ந்தது. இதில் தீர்வை|சுங்கவரியும், விற்பனை வரியும் தலா 50 சதவிகிதம். நிர்வாகச் செலவுகளையும், பணியாளர் ஊதியத்தொகையையும் கழித்த பின்னர், எஞ்சியுள்ள வரி வருவாய் முழுக்க அரசுக்கு லாபமே. ஏனெனில் அரசே மொத்த விற்பனையாளராகவும், சில்லறை விற்பனையாளராகவும் உள்ளதால், இரு விலைகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசின் கைக்கே வந்து சேர்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822 கோடி ரூபாய்களாக இருந்தது. 2005-06 ஆம் நிதியாண்டில் 23 ஆண்டுகளாக நிலைத்து வந்த மது விற்பனை வருவாய் சாதனை முறியடிக்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 10,601.5 கோடியாக உயர்ந்து, 10,000 கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10 மற்றும் 2010-11 நிதியாண்டுகளில் வருவாய் முறையே 12,491 மற்றும் 14,965 கோடிகளாக இருந்தது. மது விற்பனையில் 80 சதவிகிதம் விஸ்கி, பிராந்தி, ரம், வோத்கா போன்ற "ஹாட்" மது வகைகளும், மிச்சமுள்ள 20 சதவிகதத்தை பியர்|பீர்களும் பிடித்துள்ளன. வரி வருவாயைத் தவிர, பார் உரிமங்களை ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலமும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் குடிநுகர்வும், அவ்வப்போது நிகழும் மது விலையேற்றமும் இச்சீரான வருவாய் வளர்ச்சிக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்ததுபோல இந்த மதுவிற்கு என்று தடைவிதிக்குமோ இந்த மக்களுக்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ தெரியவில்லை தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் இந்த நிலை இப்படியே நீடித்தால் வருங்கால சமுதாயம் குடியின் பிடியில் சிக்கி அதன் கோரத்தாண்டவத்திற்கு பலியாகிவிடும். இவை இன்றைய இளைய சமுதாயத்தை சீரழித்து வருகிறது இந்த நிலை நீடித்தால் குடியில் தமிழகம் முதல் மாநிலமாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Address

No. 41, Rajarajan Street
Tiruvannamalai
606601

Telephone

9677518588

Website

Alerts

Be the first to know and let us send you an email when வலிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வலிகள்:

Share