24/06/2023
மருத்துவக் காப்பீடு ஏன் அவசியம்
திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லாரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா? எதிர்பாராத, அவசர கால மருத்துவச் செலவை எல்லாராலும் ஏற்க முடியுமா? எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா என்றால் முடியாது என்பதே விடையாக இருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு என்பது மிக அவசியம்தான்.
தவறான சிந்தனை
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் ஆண்டுதோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்குமே? எல்ஐசி பாலிசி போன்று முதிர்வு நிலையில் பணம் கிடைப்பது இல்லையே?
மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் சேமிப்பிலிருந்து செலவுசெய்து கொள்ளலாமே எனப் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான சிந்தனை.
மருத்துவக் காப்பீடு எடுக்காமல் தவறான கருத்து உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரபல சொற்றொடர் உள்ளது:
""உங்களுக்கு தேவைப்படாத நிலையில் மருத்துவக் காப்பீடு பாலிசியை எடுங்கள்--ஏனெனில் உங்களுக்கு தேவைப்படும்போது உடனடியாக மருத்துவக் காப்பீட்டை எடுத்து பலன் அடைய முடியாது''.
இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், குறைந்த வயது காரணமாக பிரீமியம் தொகையும் குறைவாக இருக்கும்.
மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியம் தொகையில் வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி-இன் கீழ் அதிகபட்சம் ரூ.25,000 வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்களாக இருந்தால் அதிகபட்சம் ரூ.50,000 வரை வரி விலக்கு பெறலாம்.
ஆரோக்கியமாக இருக்கும்போது மருத்துவக் காப்பீடு குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டால், திடீர் செலவு ஏற்படும்போது செலவு செய்த பணத்தை திரும்பக் கோருவதற்கு உதவியாக இருக்கும்.
More Details Please Call me:
V.Navaneethakrishnan
Senior financial advisor
CELL:9842643743,9245268585
Email:[email protected]