02/03/2023
கோட்டப்பாளையம் ஊராட்சியானது திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்து உள்ளது. ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய கிராமமான கோட்டப்பாளையம் கிராமத்தில், மிகவும் அடிப்படை தேவையான இந்து பொதுமக்கள் பயன்படுத்தும் மயானம் எந்தவித பராமரிப்பும் இன்றி சீரடைந்த நிலையில் உள்ளது. அடிப்படை தேவையான தண்ணீர் வசதி இன்றி மயானத்திற்கு இறுதி சடங்கு செய்ய வரும் மக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைகின்றனர். இறந்த உடல்களை கொண்டுவரும் மக்கள் சுடுகாட்டில் தண்ணீர் வசதி செய்யப்படாமல் இருப்பதால் இறுதி சடங்கு செய்ய தண்ணீருக்கு அலைய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். சுடுகாட்டில் ஏற்கனவே உள்ள தண்ணீர் தொட்டியும் பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளது. மேலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டும் எந்தவித பணியும் மேற்கொண்டு ஊராட்சி நிர்வாகத்தால் செய்யப்படவில்லை.
மயானம் தண்ணீர் வசதி இன்றி, சுகாதார சீர்கேட்டுடன் மிகுந்த மோசமான நிலையில் இருப்பதை முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் மனுவாக இன்று அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம்.