05/04/2026
மனித மனதின் சக்தி மகத்தானது. அங்கிருந்துதான் நன்மை, தீமை இரண்டுமே புறப்படுகிறது. மனதை அமைதிப் படுத்துவதும்,
அதைக் கட்டுப்படுத்தி ஆட்கொள்வதும் மிகவும் கடினமானது.
இறைமைந்தன் இயேசு கிறிஸ்து, நமக்கு மீட்பு கிடைக்க, கல்வாரி சிலுவையில் தன் இன்னுயிரை ஈந்து....
மரணத்தை வென்று, உயிர்த்தெழுந்த இந்த Easter நன்னாளில்...
மனித மன மேம்பாட்டுக்காக,
30 ஆண்டுகளாக மணப்பாறை யில் சிறப்பாகச் செயல்படும் மன வளக் கலை மன்றத்தின் பொதுக் குழு கூட்டத்தில் போரில்லா நல் உலகம் எனும் தலைப்பில் இன்று சிறப்புப் பேச்சாளராக அரை மணி நேரம் உரையாற்றினேன்.
பல அன்புசால் பெரியோர்களையும், நண்பர்களையும் நெடிய இடைவெளிக்குப் பின் அங்கு சந்தித்து மகிழ்ந்தேன்.
Thank God.