10/12/2025
🔥 “1200 ஆண்டுகால மர்மம்! சோழர்களின் கடல்கடந்த வெற்றிக்குப் பின்னால் நின்ற அந்தப் பெண் தெய்வம்!”
சோழர்கள் என்றாலே
வீரத்திலும்…
போர்திறமையிலும்…
கடல் கடந்து ஆட்சி செய்த பெருமையிலும்…
இந்தி, உலகமே வியக்கும் ஒரு பேரரசு!
கடாரம்,
மியான்மர்,
தாய்லாந்து,
கம்போடியா,
ஸ்ரீலங்கா…
இப்படி பல நாடுகளிலும்
சோழர்களின் கொடி பறந்தது!
விஜயாலய சோழன்,
கரிகால சோழன்,
ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழன்…
இந்த மன்னர்கள் போன போரெல்லாம்
தோல்வி என்ற வார்த்தையே இல்லாமல்
வெற்றியுடன் திரும்பியவர்கள்!
ஆனால்…
👉 இந்த அசைக்க முடியாத வெற்றிக்குப் பின்னால்
ஒரு “பெண் தெய்வம்” இருந்தாள் என்றால்
நீங்கள் நம்புவீர்களா?
🌺 அந்த பெண் வேறு யாரும் அல்ல…
சோழர்களின் குலதெய்வம் —
“நிசும்பசூதனி அம்மன்!”
1200 ஆண்டுகளுக்கும் மேலாக
இன்றும் தஞ்சாவூரில்
அவள் கோயில் உயிரோடு நிற்கிறது!
🧿 நிசும்பசூதனி என்ற பெயர் எப்படி வந்தது?
ஒரு காலத்தில்
சும்பன்
நிசும்பன்
என்ற இரண்டு அரக்கர்கள்
மக்களையும்…
ரிஷிகளையும்…
தேவர்களையும்…
கொடுமைப்படுத்தி வந்தார்கள்!
அவர்கள் செய்த அட்டூழியத்தை தாங்க முடியாமல்
தேவர்கள் எல்லோரும்
அம்பிகையிடம் சரணடைந்தார்கள்…
அப்போது…
அம்பிகை உக்ர ரூபம் எடுத்தாள்!
இரு அரக்கர்களையும் வதம் செய்தாள்!
👉 நிசும்பனை அழித்தவள் என்பதால்
அவளுக்கு
“நிசும்பசூதனி”
என்ற திருநாமம் உருவானது!
📜 நிசும்பசூதனி – சோழர்களின் குலதெய்வம் என்பதற்கான ஆதாரம்?
இதற்கு மிக முக்கியமான ஆதாரம் உள்ளது!
✅ திருவாலங்காட்டுச் செப்பேடுகள்!
அந்த செப்பேடுகளில்
“சும்பன், நிசும்பனை அழித்த அந்த தேவியை
சோழர்கள் கோவில் எழுப்பி வழிபட்டனர்”
என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது!
மேலும்,
“தேவர்கள் வணங்கும் பாதங்களை உடைய தேவியை பூசித்து,
நான்கு கடல்களையும் ஆடையாக அணிந்த பூமியை
சோழன் எளிதாக ஆண்டான்”
என்று அந்த செப்பேடுகள் வரலாற்றுச் சான்றாக சொல்கின்றன!
👑 விஜயாலய சோழன் & நிசும்பசூதனி அம்மன்
கி.பி. 850-ம் ஆண்டில்
உறையூரில் சிற்றரசனாக ஆட்சியை தொடங்கிய
விஜயாலய சோழன்,
முத்தரையர்களை வீழ்த்தி
தஞ்சையை கைப்பற்றினான்!
பின்பு தலைநகரை
பழையாறையிலிருந்து – தஞ்சைக்கு மாற்றினான்!
👉 தனது ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம்
நிசும்பசூதனி அம்மன் தான்
என்று நம்பிய விஜயாலயன்…
அவளுக்காக
தஞ்சாவூரில்
ஒரு அழகிய கோயிலை கட்டினான்!
“என் ஒவ்வொரு போருக்கும் வெற்றியை நீயே தர வேண்டும்”
என்று வேண்ட…
அம்மன் நேரில் தோன்றி
வரமளித்ததாக
வரலாறு சொல்கிறது!
🛡️ தஞ்சையை காக்கும் காவல் தெய்வம்!
அந்த நாள் முதல்
நிசும்பசூதனி…
✅ சோழர்களின் குலதெய்வம்!
✅ தஞ்சையின் காவல் தெய்வம்!
✅ ஒவ்வொரு போர் வெற்றிக்கும் அடிப்படை சக்தி!
சோழர்கள் எந்தப் போருக்குச் சென்றாலும்…
👉 முதலில் நிசும்பசூதனியை வழிபட்ட பிறகே போர்க்களம் புறப்பட்டார்கள்!
🛕 1200 ஆண்டுகள் பழமையான அந்த கோவில் எங்கு?
இந்த புனிதமான கோவில்…
📍 தஞ்சாவூர் – கீழவாசல்
பூமால் ராவுத்தர் கோவில் தெருவில்
இன்றும் உயிரோடு நிற்கிறது!
✅ அம்மன் சிலை –
ஆறு அடிக்கும் மேலான உயரம்!
✅ இன்றும் பொலிவு மாறாமல்!
✅ கோவிலின் மற்றொரு பெயர் –
“வடபத்திரக்காளியம்மன்”
🌈 ஒரு சிறிய நம்பிக்கை…
👉 சோழர்களுக்கு எப்படி
நிசும்பசூதனி வெற்றியை வாரி வாரி கொடுத்தாளோ…
👉 அதேபோல நம்மையும்
வெற்றியின் பாதையில்
அவள் நிச்சயம் அழைத்துச் செல்வாள்!
தஞ்சை சென்றால்…
இந்த அம்மனை தரிசிக்காமல்
திரும்பவே வேண்டாம்!
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.