01/07/2019
லி வருகின்றனர்.
சரக்கு விற்பவர் தனது மாதாந்திர படிவத்தை தாக்கல் செய்யாமல் விட்டாலோ அல்லது தவறுதலாக தாக்கல் செய்தாலோ வாங்குபவர் எவ்வாறு பொறுப்பு ஏற்க முடியும்? என்ற அடிப்படை இல்லாமல் இவ்வாறு ஒரு சட்டப்பிரிவு இருந்தால் கண்டிப்பாக அச் சட்டப்பிரிவு மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ஜிஎஸ்டி வந்தபோது ஜி எஸ் டி ஆர் 1, 2, 3, 2A, 1A ஆகியவைகள் சரியான முறையில் அரசு வடிவமைத்து கொடுத்தும் கூட GSTN வலைத்தளம் சரியான முறையில் வடிவமைக்கப் படாததால் இந்த திட்டங்கள் அமல் படுத்த இயலவில்லை.
ஒரே ஒரு மாதம் GSTR-2 கொடுத்தார்கள்.
ஆனால் அதில் பல குளறுபடிகள் இருந்ததால் அதனை தற்போது வரை வலைத்தளத்தில் ஏற்றவில்லை.
குளறுபடி இருந்ததால் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு படிவம் GSTR-2 என்பதை புரிந்துகொள்ள வேண்டும். GSTR-2 என்பது கொடுக்கப்பட்டிருந்தால் ஒருவேளை வாங்குபவர் மேற்படி தவறை திருத்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.
அவ்வாறு விற்றவர் செய்த தவறை வாங்குபவர் சரி செய்ய அமைக்கப்பட்ட வடிவமான GSTR-2 என்பதை ஏன் இதுவரை வலைத்தளத்தில் ஏற்ற வில்லை என்ற கேள்வியை யாருமே கேட்கவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.
பெரும்பாலும் இவ்வாறு மேடையில் விளக்கம் சொல்லும் நபர்கள் இதனை அரசுக்கு சொல்லாமல் அல்லது வணிகர் சங்கங்களுக்கு சொல்லாமல் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தது ஏன்?
விற்பனை செய்தவர் தாக்கல் செய்ய வேண்டிய படிவம் GSTR - 1 அதில் தவறு இருந்தால் வாங்குபவர் அதனை திருத்தக்கூடிய ஒரு படிவம் தான் GSTR- 2.
GSTN வலைத்தளம் அமைத்தவர்கள் சரிவர அமைக்காததால் இரண்டு மாதத்திற்கு என்று சொல்லி திடீரென நுழைக்கப்பட்ட படிவம் தான் GSTR-3B.
மேற்படி GSTR-3B இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பப்படுள்ளது என்றால் வலைத்தளம் அமைத்து சரியில்லை என்பதை யார் எடுத்துக் கூறுவார்?
இந்த வருடம் டிசம்பர் வரை GSTR-3B என்பது இருக்கும் என்று கூறுகிறார்கள்.
வெளிவந்த செய்திகளும் அவ்வாறுதான் கூறுகின்றன.
அப்படி இருக்க என்ன அவசியம் வந்தது?
இரண்டு மாதங்களில் நீக்கப்பட வேண்டிய படிவம் இரண்டு வருடங்களாக நீக்கப்படவில்லை.
இது யார் தவறு?
இதற்கு யார் பொறுப்பு?.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
GSTR - 1 என்பதை விற்பனை செய்த வணிகர் தாக்கல் செய்யாவிட்டால் அல்லது தாக்கல் செய்யப்பட்ட GSTR - 1 என்பதில் தவறுகள் இருந்தால் அதை கண்பிக்கும் படிவமே GSTR-2 A.
இந்த 2A என்பதில் தனது பட்டியல் ஏதேனும் இடம் பெறவில்லை என்றாலோ அல்லது தாக்கல் செய்யப்பட்ட விவரங்கள் தவறுதலாக அல்லது கொடுத்த பில்லுக்கு மாறுதலாக பில் எண் அல்லது தொகை மாறுபட்டிருந்தாலோ அதனை வாங்கிய வணிகர் GSTR-2 என்பதில் பதிய வேண்டும்.
இதுதான் முதன் முதலில் வடிவமைப்பு செய்யப்பட்ட படிவம்.
ஆனால் GSTR-2 என்பது ஜூலை 2017 மாதத்திற்கு மட்டும் தரப்பட்டது.
பின்னால் GSTR- 2 என்பது சுத்தமாக நிறுத்தப்பட்டு விட்டது.
இன்றைய மாதமாகிய ஜூன் 2019 வரை GSTR-2 என்பது வலைதளத்தில் ஏற்றப்படவில்லை.
அவ்வாறு GSTR-2 என்பதில் வாங்கிய வணிகர் தனது பில்களை தாக்கல் செய்தால் அது GSTR-1 A என்ற படிவமாக மாறி விற்றவருக்கு காண்பிக்கும்.
விற்றவர் அதை பார்த்து தனது தவறை சரிசெய்து கொள்ளலாம்.
அவ்வாறு செய்யாமல் விட்டாலும் வாங்குவோருக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
இந்த ஒரு அடிப்படை விஷயத்தை தெரியாமல் பலரும் அதாவது வணிகர்கள் பலரும் ஏனோ தானோ என்று இருந்து விட்டார்கள்.
இதுபற்றிய விவரம் அறிந்த வல்லுனர்கள் இதை அரசுக்கோ அல்லது வணிகர் சங்கங்களுக்கோ வலியுறுத்தவில்லை.
அதனால் இது நாள் வரை GSTR-2 என்பது ஏற்றப்படவில்லை.
தற்போது காலம் கடந்து விட்டது.
இதனால் 2A என்பதில் தனது பில் காணப்படவில்லை என்றால் அதற்கான வரித்தொகையை வாங்குபவர் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என்று தற்போது சொல்லப்படுகிறது.
சரக்கு விற்றவர் செய்த தவறுக்கு சரக்கு வாங்கியவர் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?
அரசு ஒருவருக்கு ஜிஎஸ்டி எண் வழங்கும்போது ஆதார் எண் பான் எண் போட்டோ வணிகம் செய்யும் இடத்திற்கான ஆதாரம் மின்கட்டண ரசீது நகல் போன்ற ஆவணங்களை கேட்டு பெறுகிறது.
அவ்வாறு ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் விபரங்களை வைத்து அதன் அடிப்படையிலேயே தான் GSTபதிவு எண் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்திருக்க கூடிய, அதிகாரங்களை கையில் வைத்திருக்க கூடிய அரசால் விற்றவரிடம் அந்த தொகை வாங்க இயலாது என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?
சரக்கு விற்று விட்டு வரி கட்டாமல் அனைவருமே வெளிநாட்டிற்கு ஓடி விட்டார்களா?
GSTR-2 என்பதை தராமல் GSTR-9 ,9A, 9C என்பதை தாக்கல் செய்யக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
எதிராளி தவறு செய்தால் தனது தரப்பில் அதனை திருத்தக்கூடிய வாய்ப்புகள் தரப்படும் என்று சொல்லித்தான் GSTR-1, 2 , 3 போன்றவை இந்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உ