13/10/2025
#நோய்க்கு_முன்_?
கேள்வி: ஆரோக்கியமாக இருக்கும் பொழுது மருந்துவ காப்பீடு பெறுவதால் விளையும் நன்மைகள் என்ன?
பதில்: பெரும்பாலும் நாம் அனைவரும் கூறுவது என்னவென்றால், நான் தான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேனே எனக்கு எதற்காக மருத்துவ காப்பீடு? ஏதாவது நோய்வாய்ப்பட்டால் பார்த்துக் கொள்ளலாம் என்பது தான் பதிலாக இருக்கும்.
ஆம். நீங்கள் கூறுவது ஒருவகையில் உண்மை தான் என்றாலும் கூட ஒரு சிறு தகவலை உங்களுக்கு தெரிவிக்க மருத்துவ காப்பீட்டு ஆலோசகர் என்ற முறையில் கடமைப்பட்டுள்ளேன்.
உதாரணமாக, 30 வயது உடைய ஆரோக்கியமான நபர் தனிப்பட்ட முறையில் ரூபாய் 3 இலட்சங்களுக்கு மருத்துவ காப்பீடு பெற்றால்...
1. ஆரோக்கியமாக இருக்கும் பொழுது ஆண்டிற்கு அவர் செலுத்தும் பிரீமியம் வெறும் ₹ 5,293.00.
இதுவே, அந்த நபருக்கு ஏதாவதொரு நோய் ஏற்பட்ட பிறகு மருத்துவ காப்பீடு பெற்றால்... பிரீமியம் எவ்வளவு என்பதனை கவனிக்கவும்...
2. நீரிழிவு நோய் - ₹ 9,759.00 ஆண்டிற்கு (2 மடங்கு)
3. இருதயநோய் - ₹ 30,680.00 ஆண்டிற்கு (6 மடங்கு)
4. புற்று நோய். - ₹ 21,004.00 ஆண்டிற்கு (4 மடங்கு)
என ஆண்டுதோறும் தேவையில்லாமல் அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டி வரும்.
இப்பொழுது இதில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், அது என்னவென்றால்... சரி. நான் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது காப்பீடு பெறுகிறேன். பிறகு, காப்பீடு பெற்ற எனக்கு மேற்குறிப்பிட்ட நோய்களில் ஏதாவது ஏற்பட்டால் பிரீமியம் அந்த நோய்களுக்கு தகுந்த மாதிரி வந்துவிடுமா?
இல்லை, நிச்சயமாக வராது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது மருத்துவ காப்பீடு பெற்று எவ்வளவு பிரீமியம் செலுத்தினீர்களோ, அதே பிரீமியத்தைத்தான் மேற்குறிப்பிட்ட நோய் ஏதாவது உங்களுக்கு ஏற்பட்டாலும் செலுத்துவீர்கள்.
மருத்துவ காப்பீடு பெறுவது என்பது நோய் வந்த பிறகு பெற்றுக்கொள்வதல்ல...
வருமுன் காப்பதும்... வந்த பிறகும் காப்பதும்.
மேலும் காப்பீடு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும்:
Lic M Gowtham Mib
𝗦𝗧𝗔𝗥 𝗛𝗘𝗔𝗟𝗧𝗛 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘
𝟵626166642
நன்றி...