Venkatesh LIC Gobichettipalayam

Venkatesh LIC Gobichettipalayam LIC-Agent

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், ...
01/09/2024

இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 68 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது...

வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்.ஐ.சி நிறுவனம் தொடங்கப்பட்டது...

67 ஆண்டுகளில், 13 ஆவது திட்டக் காலத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ள நிதி ஏழு லட்சம் கோடிக்கு மேலாகும்...

தற்போது எல்.ஐ.சி நிறுவனம் மட்டும்தான் தனியார் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது.

எல்.ஐ.சி தொடங்கப்பட்ட போது பிரதமர். பண்டித ஜவர்கலால் நேரு அவர்கள் மூன்று முக்கியமான நோக்கங்களைப் பிரகடனம் செய்தார்.

ஒன்று, காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இரண்டாவதாக, நுகர்வோருக்கு தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவது...

இந்தக் குறிக்கோள்களை 67 ஆண்டுகளாக எல்.ஐ.சி நிறுவனம் உறுதியோடு நிறைவேற்றி வருவதால்தான் இன்று 50 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கி, காப்பீட்டுத் துறையில் முன்னணி முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது...

ஒவ்வொரு ஆண்டும் பாலிசி முதிர்வு தொகைகளை வழங்குவதிலும் இழப்பீடு கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது...

உலகின் வலிமையான 3 வது மிகப்பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது..

இந்தாண்டு வெளிவந்துள்ள பார்ச்சூன்
பட்டியலில் 99வது இடம்பெற்று முதல் 100க்குள் இடம் பெற்ற இந்திய நிறுவனம்..

காப்பீட்டு துறை உலகத்தில் க்ளைம் கோரிக்கைகளை அதிகளவில் நிறைவேற்றியது LIC மட்டுமே என்ற பெருமையே அதன் பலத்தை பறைசாற்றுகிறது..

உலகின் மிகப்பிரபலமான தர அடையாளம் பெற்ற 10 வது நிறுவனம் LIC என்பது குறிப்பிடத்தக்கது...

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வரும் ஊழியர்கள் மற்றும் அனைத்துத் தரப்புப் பணியாளர்கள், முகவர்கள்,
பாலிசிதாரர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை இந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூற்றாண்டு கடந்தும் எல்.ஐ.சி நிறுவனம் மக்களுக்கு மிகச்சிறந்த சேவையாற்ற வேண்டும்.

அன்புடன்
கை.வெங்கடேஷ்
LIC முகவர்
9842393342
8610661207
கோபிசெட்டிபாளையம்.





Photo.LIC Building at Chennai decorated for Insurance Week Celebrations.

ஆயுள் காப்பீடு பற்றிய TF Rinnozah அவர்களின் ஒரு அருமையான பதிவு முடிந்த வரை சற்று நேரம் ஒதுக்கி படித்து பகிரவும் எல்லாருக...
07/02/2023

ஆயுள் காப்பீடு பற்றிய TF Rinnozah அவர்களின் ஒரு அருமையான பதிவு முடிந்த வரை சற்று நேரம் ஒதுக்கி படித்து பகிரவும் எல்லாருக்குமே கட்டாயம் உபயோகமா இருக்கும் 🧡

முதலில் ஒரு சிறிய உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன். சென்ற வாரம் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின், சகோதரியின் கணவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து போனார். அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். மூன்று குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு மனைவி ஊரில் இருந்திருக்கிறார். கணவனின் திடீர் மரணம் அவரை உள ரீதியாக மட்டுமல்ல, நிதி ரீதியாகவும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் அவரின் வருமானத்தை நம்பி வீடு கட்ட ஆரம்பித்திருந்தார். வங்கிக் கடன்கள் வேறு. குடும்பத்திலும் பெரிதாக உதவ யாருமில்லை. பள்ளிப் படிப்பு மட்டுமே படித்திருக்கும், வாழ்க்கையில் இதுவரை வேலைக்கே செல்லாத அந்தப் பெண் மூன்று குழந்தைகளோடு எப்படி இத்தனை பாரத்தை சுமக்கப்போகிறார்?

இதைப் பற்றி இதற்கு மேல் இன்னும் விரிவாக எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் உங்களுக்கே நிலமையின் விபரீதம் புரிந்திருக்கும். இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், பல நண்பர்கள் என்னிடம் முதலீடு பற்றிய ஆலோசனையையும், அறிவுரைகளையும் அடிக்கடி கேட்பார்கள். முதலீட்டு ஆலோசனை என்பது நபருக்கு நபர் வேறுபடும். It’s a personalied product எனவே அது தொடர்பாக பொத்தாம் பொதுவாக இதை பண்ணுங்கள், இதைப் பண்ண வேண்டாம் என சொல்லிவிட முடியாது. உங்கள் பிரதேசத்தில் உள்ள வங்கியில், ஒரு தகுதி பெற்ற (Qualified) முதலீட்டு ஆலோசகரிடம் சென்று அறிவுரை பெற்றுக்கொள்ளுங்கள் என்பேன். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தவறாமல் ஒரு விடயத்தை மட்டும் அறிவுறுத்தி அனுப்புவேன். அது தான் கண்டிப்பாக ஆயுள் காப்பீடு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள் என்பது.

ஏனென்றால் உங்கள் இறப்புக்கு பிறகு, உங்களைச் சார்ந்தவர்கள் வாழ்க்கை மிக்கப்பெரிய அளவில் ஆட்டம் காணும். அப்போது அவர்களுக்கு இந்த ஆயுள் காப்பீடு கண்டிப்பாக நிதி ரீதியாக கை கொடுக்கும்.

மரணத்தைப் பற்றி நினைக்கவே நாம் விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பாவிட்டாலும் அது கண்டிப்பாக வந்தே தீரும் என்பது தான் நிதர்சனம். எதிர்பார்க்காத நிகழ்வுகள் நம்முடைய வாழ்வை மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்கள் வாழ்வையும் எப்பொழுது வேண்டுமானாலும் தடம் புரளச் செய்து விடலாம். எனவே எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்த்து, அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும். அத்தகைய புத்திசாலித்தனமான ஒரு முயற்சியே காப்பீடு.

டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது அதன் நிர்வாகத்தை அணுகிய life boats விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் சேல்ஸ்மேனிடம் "கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாத கப்பலுக்கு லைஃப் போட்டா”? என ஏளனமாகப் பேசி திருப்பி அனுப்பினார்கள். ஆனால் ஒரு கப்பலில் இவ்வளவு சதவீதம் லைஃப் போட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தால் 1500 உயிர்கள் தப்பியது. ஆயுள் காப்பீடும் இது போலத்தான். Better safe than sorry!

இங்கே பலருக்கும் ஆயுள் காப்பீடு பற்றிய போதிய விளக்கம் இல்லை என்பதாலேயே அதை அப்படியே டீலில் விட்டு விடுகிறார்கள். அதேபோல, முதலீட்டில் காட்டும் ஆர்வத்தை மக்கள் காப்பீட்டில் காட்டுவதில்லை. காரணம், இதில் நான் கட்டும் காசு திரும்ப கிடைக்காதே என்ற எண்ணம். ஆனால், நீங்கள் கட்டும் பணம் முதிர்வின் போது உங்களுக்கு கிடைக்கும் வகை காப்பீடுகள் கூட இப்போது வந்துவிட்டன.

Sum assured பாலிசி மூலம் ஆயுள் காப்பீட்டின் முதிர்வுத்தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படும். ஒருவேளை Maturity-க்கு முன்பே பாலிசிதாரர் மரணமடைந்தால், அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு (Nominee) காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே நீங்கள் இது போன்ற ஒரு பாலிசியை உங்கள் காப்பீடு ஏஜெண்டிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

பெரும்பாலான குடும்பங்களில் ஆயுள் காப்பீடு எடுக்காததன் இன்னொரு காரணம் அதற்கான பிரிமியம் கட்டும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை. குறிப்பாக middle class மாத வருமானம் பெரும் குடும்பங்களில், கிடைக்கும் சம்பளம் அன்றாட செலவுக்கே சரியாகி விடும். இங்கு சேமிப்பே இல்லை எனும்போது காப்பீட்டுக்கு எங்கே போவது என்பதும் பலரது பொதுவான புலம்பல்.

இப்போது பல காப்பீட்டு நிறுவன பாலிசிக்களில் முதல் 5-10 வருடங்கள் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். அதன் பிறகு உங்கள் பணத்தை அவர்கள் வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வார்கள். மெச்சூரிட்டியின் போது sum assured செய்யப்பட்ட முதிர்வு தொகையைப் பாலிசிதாரருக்கு வழங்குவார்கள். அதற்கு முன் ஒருவேளை இறப்பு நிகழும் பட்சத்தில் காப்பீட்டுத் தொகை மொத்தமாக குடும்பத்துக்கு வழங்கப்படும். இந்தத் தொகைக்கு ஒரு பைசா வரி செலுத்தத் தேவையில்லை. உங்கள் வருமானத்துக்கு ஏற்ப தொகையையும், பிரீமியத்தையும் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்பதால், உங்களால் முடிந்த குறைந்தபட்ச ஒரு சிறு தொகையையாவது ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்யுங்கள்.

40 வயதுக்கு மேல் பல வியாதிகள் மெல்ல மெல்ல நம் உடலை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கும், எனவே ஆரோக்கியமான உடல்நலம் உள்ளபோதே இன்சூரன்ஸ் செய்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் கட்டும் பிரீமியம் தொகை பெரிய அளவில் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பலவிதமான பாலிசிக்களை வழங்குகின்றன. எனவே shop around செய்து உங்களுக்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்யலாம். மார்க்கெட்டில் இருக்கும் காப்புறுதி நிறுவனங்களின் பாலிசிக்களை எல்லாம் மொத்தமாக ஆராய்ந்து, அதில் உங்கள் தேவைக்கு பொருத்தமான ஒன்றை தேடித்தரும் ஏஜெண்டு நிறுவனங்களும் பல வந்துவிட்டன. ஆனால் எந்த பாலிசியை எடுத்தாலும், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைத் தெளிவாகப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு சிறு சந்தேகம் என்றாலும் உங்கள் ஏஜெண்டிடம் விளக்கம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்வது மிக மிக முக்கியம்.

ஆயுள் காப்பீடு உயிர் காக்கும் மருந்து அல்ல. அந்த உயிர் போய் விட்டால், அவரைச் சார்ந்து இருப்பவர் தொடர்ந்து உயிர் வாழக் கிடைக்கும் ஒரு ஊன்று கோல் அது. இதுவரை உங்கள் ஆயுளை காப்பீடு செய்திருக்கவில்லை என்றால், இதைப் படித்தபிறகு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஆயுள் காப்பீடு ஆடம்பரமல்ல, அத்தியாவசியம் !

29/01/2023

குடியரசு தின விழாவில், குறுகிய காலத்தில் சிறப்பான வணிகம் புரிந்தமைக்காக, எனக்கு LIC-ல் Red carpet வரவேற்பும், வெற்றி பதக்கம் மற்றும் குடியரசு தின வெற்றி கோப்பையும், வழங்கி, சிறப்பு கெளரவமும், பாராட்டும் வழங்கப்பட்டது. நன்றி.

பி. சரோஜாதேவி சனவரி 7, 1938 கர்நாடகா,ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்...
07/01/2023

பி. சரோஜாதேவி சனவரி 7, 1938 கர்நாடகா,
ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார்; 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திரைப்படத்துறையினரால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.

பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் ஒக்கலிகா்கவுடா் சமூகத்தில் பிறந்தவர்.

சரோஜா தேவி உண்மைப் பெயர் ராதாதேவி கவுடா பெங்களூர், மைசூர் ராஜ்ஜியத்தில் பிறந்தார் (இப்போது பெங்களூரு, கர்நாடகம் 7 ஜனவரி 1938 இல்) அவரது தந்தை பைரப்பா காவல் துறையில் பணிபுரிந்தார், அவரது தாயார் ருத்ரம்மா ஒரு ஹோம்மேக்கர் ஆவார். அவர்களின் நான்காவது மகளாவார்.

பைரப்பா அவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்படி கேட்டார், மேலும் நடிப்பை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள ஊக்குவித்தார்.

ஒரு இளம் சரோஜா தேவி தனது தந்தையுடன் அடிக்கடி ஸ்டுடியோக்களுக்கு வந்திருந்தார், அவர் பொறுமையாக அவரது சலங்கைகளைக் கட்டிக்கொண்டு, அவர் நடனமாடிய பிறகு வீங்கிய கால்களை மசாஜ் செய்வார்.

அவரது தாயார் அவருக்கு ஒரு கண்டிப்பான ஆடைக் குறியீட்டைக் கொடுத்தார்:

நீச்சலுடைகள் மற்றும் அறைகுறை ஆடைகள் அணிந்து நடிப்பதைத் தவிர்ப்பது போன்ற கட்டுப்பாடுகள் ஆகும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதைப் பின்பற்றினார்.

பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி தனது 13 வயதில் ஒரு விழாவில் பாடும்போது அவர் முதலில் காணப்பட்டார், ஆனால் அவர் திரைப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார்.

தமிழ் திரையுலகில் உலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி அவர்கள்.

மக்கள் திலகம் எம். ஜி. ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.

பெங்களூரைச் சேர்ந்த போலிஸ் அதிகாரி ஜாவர் பைரப்பா–ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாக ராதாதேவி என்ற இயற்பெயருடன் பிறந்தாா்

இவருக்கு சரஸ்வதிதேவி, பாமாதேவி, சீதாதேவி, என்ற மூன்று அக்காவும் வசந்தாதேவி என்ற ஒரு தங்கையும் உள்ளனா்.

இவா் ராதாதேவி என்ற பெயரை திரை உலகிற்காக சரோஜாதேவி என்று பெயரை மாற்றி கொண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் (1955) கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

கன்னடப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித்தந்த படம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் (1958).
இதன்பின் ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' 1959 படத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

கக்கன் நினைவு தினம் டிசம்பர்-23கக்கன் அவர்களை பற்றிய தகவல் :ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள்...
23/12/2022

கக்கன் நினைவு தினம் டிசம்பர்-23

கக்கன் அவர்களை பற்றிய தகவல் :

ஊரை அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன உயர் திரு கக்கன் அவர்களைப் பற்றிய தகவல்….

தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்….

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது…

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்…நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்ல முடியாத மனிதர்,–’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை!

தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்   சி.சு.செல்லப்பா நினைவு நாள் இன்று (C. S. Chellappa, செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 19...
18/12/2022

தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் சி.சு.செல்லப்பா நினைவு நாள் இன்று (C. S. Chellappa, செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998)
ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா.

சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.

தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார்.

விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார்.

இன்று - சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர்-18• உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்த...
18/12/2022

இன்று - சர்வதேச இடம்பெயர்வோர் தினம் டிசம்பர்-18

• உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

• சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தோராக உள்ளனர்.

இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

யார்:

இடம்பெயர்வோர் என்பவர், 'சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில், தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தோரை குறிக்கிறது'. இதைத் தவிர உள்நாட்டிலேயே இடம்பெயர்வோரும் உள்ளனர்.

• சம உரிமை:

• இடம் பெயர்ந்தோருக்கு ஒவ்வொரு அரசும் பாதுகாப்பு, சலுகைகள் வழங்க வேண்டும். இடம்பெயர்வோரை தவிர்க்கும் போது, அந்நாட்டிற்கு தான் இழப்பு. இவர்களை அங்கீகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரம் உயரும்.

வரலாற்றில் இன்று டிசம்பர் 18,சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று.இலங்கை...
18/12/2022

வரலாற்றில் இன்று டிசம்பர் 18,

சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார்.

குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார்.

சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.

யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.

சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்குபாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.

சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.

தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.
20க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் 57ஆவது வயதில் (1879) மறைந்தார்.

உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18...
18/12/2022

உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18)தான் பிறந்தார்.

லெனின் மறைவுக்குப் பின், 1922 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக செயல்பட்டார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை தோற்றுவித்து, உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக ரஷ்யாவை மாற்றினார்.

போரின் காரணமாக உலகம் முழுவதும் மாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனில் மட்டும் ஸ்டாலின் கொண்டுவந்த ஐந்தாண்டு திட்டங்களால் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்றது.

இரண்டாம் உலகப்போரின்போது ஸ்டாலின் வீரம் அசாதாரணமானது.

உலகப் போரில் மற்ற நாடுகளை விட சோவியத் ஏராளமான உயிர் இழப்புகளையும், பொருள் இழப்புகளையும் சந்தித்து இருந்தன.

போரின் முடிவில் ஸ்டாலின் தலைமையில் சோவியத் வீறு கொண்டு எழுந்து நின்றது. ஸ்டாலின் ஆட்சி குறித்து விமரிசனங்களும் நிறைய உண்டு

கடைசி நேரம்       ஜூலியஸ் சீசர் சாகும் பொது                     துரோகம் செய்த நண்பனை பார்த்து 'யூ டூ புரூடஸ்.?  என்றார்....
08/12/2022

கடைசி நேரம்

ஜூலியஸ் சீசர் சாகும் பொது
துரோகம் செய்த நண்பனை பார்த்து 'யூ டூ புரூடஸ்.? என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்' அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை....

பெருந்தலைவர் காமராஜர்
தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ''வைரவா விளக்கை அனணத்து விடு''என்பது தான்.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான, காலிகுலா, தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா. நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை,
"கடவுளே என்ன நடந்தது எனக்கு?''

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா ., தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன்
இறக்கும் பொது "நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரிசாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது" என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில்.
கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான்.

எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது, எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் விடைபெற்று போய் இருக்கிறார்கள்.✍🏼🌹

22/11/2022

World Hello Day November-21

ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
ஹலோ
இன்று
📞 *உலக ஹலோ தினம்*

எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர்.

அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே.

இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்.

சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

ஹலோ
ஹலோ
ஹலோ
உங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்!!!!!

Address

Gobichettipalayam
Gobi
638452

Telephone

+919842392242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Venkatesh LIC Gobichettipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Venkatesh LIC Gobichettipalayam:

Share