26/07/2022
31-07-2022 - சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் மாத பூச விழா அழைப்பிதழ்
தயவு
பெருந்தயவுடையீர்,
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருந் தயவினாலும், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் கருணையினாலும், திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருளாசியினாலும், நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (31-July 2022) ஞாயிற்றுக் கிழமை,
1. மாத பூச விழா, மற்றும் தவத்திரு ஊரன் அடிகளாரின் மறைவிற்கு மலர் அஞ்சலி செலுத்துதல்,
2. அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் திருக்கைச் சாற்று பிரதிகளை கண்ணாடிப் பேழையில் இடம் பெறச் செய்தல் விழாவும்,
3. திருப்பாவை - திருவெம்பாவை - திருநம்பாவை புதிய நூல் வெளியீட்டு விழாவும்,
தயவு திரு S.S.சிவராம் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, குடும்பத்தோடு - தயவு அன்பர்களும், சன்மார்க்க சான்றோர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக வருகை தந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற வேண்டுமென்று அன்புடன் அழைக்கின்றோம்.
தயவு