MD IHSAN HYATT SPOT

MD IHSAN HYATT SPOT Honesty and frankness make you vulnerable. Be honest and frank anyway. https://www.facebook.com/imi786ihsa

Indian digital election bjp Too mysterious 😡
06/12/2024

Indian digital election bjp
Too mysterious 😡




உண்மையான இறைவனை பற்றி எடுத்துரைக்கும் போது சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். மேலும்.. இஸ்லாம் என்பது பைபிளின் காப்பி என்ற...
12/07/2024

உண்மையான இறைவனை பற்றி எடுத்துரைக்கும் போது சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். மேலும்.. இஸ்லாம் என்பது பைபிளின் காப்பி என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். பைபிளில் இந்த தகவல் உண்டா?

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் , 'சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை உலக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரின் (அப்போதைய புதிய) நம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (இறுதி) நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது' எனும் இந்த (திருக்குர்ஆன் 06:158 வது) வசனத்தை ஓதினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4636.

இதுபோன்று எண்ணற்ற தகவல்கள் இஸ்லாத்தில் இருக்கின்றது. ஆனால் பைபிளில் இதுபோன்ற தகவல்கள் எதுவுமே கிடையாது.

இறைவன் வழங்கிய உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. முன்னறிவிப்புகள் நடக்க ஆரம்பிக்கும் சமயம் புத்தி தெளிந்து ஒரு பிரயோஜனமும் கிடையாது. முந்தி கொள்ளுங்கள்.
👇👇👇👇👇

சங்கிகளின் அடியாள்துறைகள் போடும் வழக்கு முக்காவாசி போலிதான் போல ஜாபர் சாதிக் வழக்கில் உண்மை வெளிவந்துள்ளது விபரம் கமெண்ட...
12/07/2024

சங்கிகளின் அடியாள்துறைகள் போடும் வழக்கு முக்காவாசி போலிதான் போல ஜாபர் சாதிக் வழக்கில் உண்மை வெளிவந்துள்ளது விபரம் கமெண்ட்ல 👇👇

09/07/2024

நாம்  வீட்டை  பெறுக்கி அந்த   குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்...
06/07/2024

நாம் வீட்டை பெறுக்கி அந்த குப்பையை. வெளியே போடாமல் கட்டிலுக்கு அடியில் சேர்த்து வைத்துவந்தால் நிலமை என்னவாகும் முதலில் எறும்பு வரும், பிறகு கரப்பான்வரும் கரப்பானை சாப்பிட பல்லி வரும், பிறகு எலி வரும். நிலைமை மோசமாகி போனால் பாம்பு வரும், பாம்பு வந்துவிட்டால் எலிக்கு மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும் பாதிப்பாக அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

* உடலில் கழிவுகள் சேர சேர நோய்கள் அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள் நம்மை விட்டு நீங்கும்.*

* ஆங்கில மருத்துவம் சாதாரண சளி முதல் பெரும் பெரும் வியாதிகள் வரை எதையும் தீர்ப்பதில்லை, மாறாக நம் உடலுக்குள்ளேயே ஒளித்து வைக்கின்றது.*

* கடுமையான தலைவலி, மாத்திரையை போட்டதும் எப்படி நீங்கியது. வெரி சிம்பிள் நம் மூளைக்கு வலியை உணர்ததும் நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?*

* பேதிக்கும் இதே சங்கதிதான், பேதியாகும் போது மூளையானது நமது உடலில் இருக்கும் நீரை எல்லாம் குடலுக்குவர செய்து கழிவை வெளியேற்றும். இப்போது நாம் போடும் பேதி மாத்திரை குடலுக்கு வரும் நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர் சப்ளையாகாததால் பேதி நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே தேக்கம் அடைகின்றது.*

* சளி, இருமல் மாத்திரை போடுகின்றீர்கள் அந்த மாத்திரை உங்களுக்கு அதிகமாக தூக்கத்தை வரவழைத்து சளி வெளியேறுவதை தடுக்கின்றது. உடலின் கழிவை வெளியேற்றும் சக்தியை தடுத்து சளி நுரையீரலில் தேக்கமடைகின்றது.*

* கழிவுகள் வெளியேற குறிப்பிட்ட அளவு வெப்பம் உடலுக்கு தேவை, அதுதான் ஜூரம் நாம் ஜூரத்தையும் விட்டோமா? அதையும் மாத்திரைகளை போட்டு தடுக்கிறோம். ஆக கழிவுகளை வெளியேற நாம் எந்தவகையிலும் உடலோடு ஒத்துழைப்பதே இல்லை.*

* ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தடுத்து கொண்டே வருவதால்....*

* நமது உடலே சாக்கடையை.. போல மாறிவிட்டது. இனி மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும் பல வித வியாதிகள் பெயரே வைக்க முடியாத வியாதிகள் டாக்டருக்கே புரியாத வியாதிகள் என பல வருகின்றன.

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை
தள்ளிப்போடுங்கள். அமெரிக்காவில்
கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை...

3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப்
பார்க்க அனுமதி கிடைக்கும்...

ஒருவர் தவறான உணவை
உட்கொண்டார் என்று வைத்துக்
கொள்வோம்,

தொண்டை வரைக்கும் அவர்
கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது
உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை
கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை
வாந்தி மூலம் வெளியேற்றுமாறு
இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம்
வெளியேற்றித் தள்ளும் போது அவர்
உடனே டாக்டரை நாடி டொம்பெரிடன்
(Domperidone) ஒன்றைப் போட்டு
நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு
இருப்பதால் இரைப்பையிடம் மூளை
விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன்
விடவில்லையே என்று இரைப்பை
ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன்
கொடுத்த பொறுப்பை சரியாக
நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு
குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக்
கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக
அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட்
(Loperamide) ஐக் கொடுத்து நிறுத்தி
விடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக்
கண்ட மூளை குடலிடம் விசாரிக்க
இரைப்பை சொன்ன அதே பதிலை குடல்
சொல்லும்.

மூளை அடுத்து சளியாக மாற்றி
வெளியேற்றுமாறு நுரையீரலை
பணிக்கும்.

அப்போது இருமல் வரவே
பழையபடி வைத்தியரை நாடி "இருமல்
மருந்து" (Cough Syrup) ஒன்றை
சாப்பிடுவார்.

நான்காவதாக அதை வெளியேற்ற
மூளை தோலை நாடும்.

சொறி சிறங்கு முலம் தோல்
வெளியேற்ற முனையும் போது "தோல்
மருந்து" (Anti Allergic medicines)
வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி
விடுவார்.

வெளியேறும் அனைத்து
வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை
வெளியேற்றும் வரை மூளை ஓயாது
என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத் தொட்டியை
(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை
சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன்
பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி
விடவே மூளை ”இனி யாரையும் நம்பி
பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத்
தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain
Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ
அதை நீங்கள் தெளிவாகப் புரியும்
பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை
என்றால் அது தாகம் என்ற பாஷையில்
உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட
நாம் கவனிக்காது விட்டு விடுவோம்
என்பதாலோ என்னவோ எந்நேரமும்
கவனிக்க ஏதுவான உணர்ச்சி
மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால்
பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை
பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத்
தேவையபானவற்றை உணர்வை
மொழியாக்கி மூளை சொல்லும்போது
அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம்
போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று
அறிமுகப்படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை
ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று
அறிமுகப்படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே
சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,

இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து
இரசாயன வில்லைகளை விழுங்குவது
அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம்
நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை
வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும்
செயலை தடுத்து, கழிவுகளை
உடலிலேயே தங்கவைத்து,


மேலும் சேர்த்து, நோய்களை
பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு
செல்லும்!


உடல் மொழியை
புரிந்துக்கொள்ளுங்கள்!

மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்கியம் அனுபவியுங்கள் .

* இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.*

----------------------------------------------

கலிகாலத்தின்_கதாநாயகர்_கல்கி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஆவார்கள்.

இதை நாம் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும்.

இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு முஸ்லிம் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ”பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு ஹிந்து கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னும் மாமனிதரே ஆவார்கள். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

சான்றுகள்:

1. வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2. ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ”ஜஸீரத்துல் அரப்” என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3. ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.

ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4. அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5. கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6. கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருவர் தான்.

7. மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”மிஃராஜ்” இரவில், ”புராக்” வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8. அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி உண்டு. இவை யாவும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தவிற வேறு எவரைக் கூறிப்பிடுகிறது?

9. மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன.

அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்..

இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும்.

அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது.

அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது.

உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

🚩நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.🚩நம்ம க...
05/07/2024

🚩நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.

🚩நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.

🚩கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .

🚩ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.

🚩ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.

🚩நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.

  நான் மாத்திட்டேன் நீங்கவிவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும்.அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒர...
04/07/2024


நான் மாத்திட்டேன் நீங்க

விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.

ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள்,

ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...

ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,

புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்...

ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய்

நூறு பேர் தவிர்த்தால்
ரூ.1,80,000

ஆயிரம் பேர் தவிர்த்தால்
ரூ.18,00,000

லட்சம் பேர் தவிர்த்தால் நூறு கோடியாகும்...

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை மதித்து
ஜியோவை புறக்கனிப்போம்

இதில் நாம் வெற்றியடையவில்லை என்றால் நாம் கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கே உணவை வாங்கி உண்ணவேண்டிய நிலை நிச்சயம் வரும்...

ஜீயோ வை புறக்கணித்தால்
தானாகவே வேளான் சட்டம் ரத்து செய்யப்படும் இதை நாம் ஏன் ஓர் அறவழிப் போராட்டமாக முன்னேடுக்க கூடாது?!

#விவசாயிகளை_ஆதரிப்போம்
#விவசாயத்தை_பாதுகாப்போம்

அவனை நம்பி மோசம் போயிட்டோம் - எங்களை நல்லா ஏமாத்திட்டான் - பழையபடி திரும்பி உங்க கிட்டேயே வந்திடுறோம் ஐயா! என்ன டவர் கிட...
01/07/2024

அவனை நம்பி மோசம் போயிட்டோம் - எங்களை நல்லா ஏமாத்திட்டான் - பழையபடி திரும்பி உங்க கிட்டேயே வந்திடுறோம் ஐயா!

என்ன டவர் கிடைக்காது....அதான் பிரச்சினை...

https://youtu.be/Fm4-oayLxm0?si=g4-IXDS0YwbkrnnfHelp Team Sea Sakthi from Kumaraguru Institutions to win Communication p...
24/06/2024

https://youtu.be/Fm4-oayLxm0?si=g4-IXDS0Ywbkrnnf

Help Team Sea Sakthi from Kumaraguru Institutions to win Communication price in the Monaco Energy Boat Challenge by watching the above video and by sharing the video to your peers.Support team India🇮🇳

🇫🇷 | Team Sea Sakthi from Kumaraguru Institutions are 15 young engineers of various branches with shared vison. The Vision is to create a sustainable futur...

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..சொந்த,...
21/06/2024

இருபது கோடி முஸ்லிம்கள் பக்ரீத் திருநாளை கொண்டாடினர்..

ஏழைகளுக்கும், தேவையுடையோருக்கும் மாமிசங்களை விநியோகித்தனர்..

சொந்த, பந்தங்களை சந்தித்தனர்..

அற்புதமான உணவுகளை உட்கொண்டனர்..

குழந்தைகளுக்கு பெருநாள் பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியூட்டினர்..

இவர்களில் ஒருவரும் மது அருந்தவில்லை..

இவர்களில் ஒருவரும் பிறமத வணக்கத்தலங்கள் முன்பு கூடி நடனமாடவில்லை..

இவர்களில் ஒருவரும் பிற மதத்தினரை (வன்முறைக்கு) தூண்டவில்லை..

என்ன ஒரு அற்புதமான சமூகம்..

*நன்றி Dhruv Rathee* 💐

NCERT’s director D P Saklani says there is no saffronisation in deleting lessons related to the Babri Masjid demolition ...
19/06/2024

NCERT’s director D P Saklani says there is no saffronisation in deleting lessons related to the Babri Masjid demolition and the Gujrat pogrom

Yes, believe him nothing below is saffronisation:

Demolition of Babri Masjid, a dark stain on the Sangh Parivar, and Ram temple construction were a key political agenda of the saffron gang. Yes, a detailed lesson about its ‘consecration’ by Modi and removal of demolition from the textbook.

Gujrat pogrom was a well-planned genocidal exercise of the Sangh Parivar, and yes removing this black chapter from the textbook.

Removal the two page details about the achievements of Mughal emperors such as Humayun, Shah Jahan, Akbar, Jahangir and Aurangzeb of Mughal from the textbook.

19/06/2024

EVM IS MODI SECRET

Address

Delhi
0007

Telephone

+918220367345

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD IHSAN HYATT SPOT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category