அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் ஸ்ரீ பெருமாள்சாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Dharapuram
  • அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் ஸ்ரீ பெருமாள்சாமி திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் ஸ்ரீ பெருமாள்சாமி திருக்கோவில் Information Page of Arulmigu Sri Siddhammal Perumalsamy Thirukovil CNRBINBBID

Name of the bank : Canara Bank. CNRBINBBID

கம்மகுல உல்லுட்ல கோத்திரம் கொரிஜிலார் குலதெய்வம்

அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் பெருமாள்சாமி திருக்கோவில்

தாசரபட்டி-638 657,திருப்பூர் மாவட்டம்

For Contact:
K.S.சீனிவாசன்,நிதிகாப்பாளர்,செல் : 98422 43300
கோவில் அர்ச்சகர் செல்: 9655027268


நமது கோவில் வங்கி கணக்கு விவரம்.

வங்கி: கனரா வங்கி
கிளை-பொன்னாபுரம்
கணக்கு எண்
9921201004313
கணக்கு பெயர்
KORIJILLAR SRI SIDDAMMAL PERUMALSAMY THIRUKOVIL TR

UST
IFSC CODE: CNRB0008996
SWIFT NO. Name of the Branch : Ponnapuram
Account no : 9921201004313
Name of the A/c: KORIJILLAR SRI SIDDAMMAL PERUMALSAMY THIRUKOVIL TRUST
IFSC CODE: CNRB0008996
SWIFT NO.

அன்பர்கள் அனைவரும் தங்களது  தலைக்கட்டு வரிகளை நமது கோவில் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுகிறோம். நமது கோவில் வங்கி கணக்க...
30/03/2022

அன்பர்கள் அனைவரும் தங்களது தலைக்கட்டு வரிகளை நமது கோவில் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுகிறோம்.
நமது கோவில் வங்கி கணக்கு விவரம்.

வங்கி: கனரா வங்கி
கிளை-பொன்னாபுரம்
கணக்கு எண்
9921201004313
கணக்கு பெயர்
KORIJILLAR SRI SIDDAMMAL PERUMALSAMY THIRUKOVIL TRUST
IFSC CODE: CNRB0008996
SWIFT NO.
CNRBINBBID

Paytm, Gpay, PhonePay போன்ற UPI வழியாகவும்உங்களது காணிக்கைகளை செலுத்தலாம். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எங்களது Paytm போன் எண் 7094130557 (Korijillar Sri Siddhammal Perumalsay ) மூலமும் உங்களது காணிக்கைகளை செலுத்தலாம்.

30/03/2022

அன்பர்களின் கனிவான கவனத்திற்கு,

☘️☘️☘️☘️☘️
1.மகா கும்பாபிஷேகம் முடிந்த பின் அன்றே பக்தர்கள் மொட்டை எடுப்பது, காது குத்துவது மற்றும் பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்ய தொடங்கலாம். பக்தர்கள் பொங்கல் வைப்பதற்கு தனியாக புதிய சமையலறை கட்டப்பட்டுள்ளது..

2. 5/4/22 அன்று பக்தர்கள் தங்குவதற்கு மிதமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள குளியலறைகளை, கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. 5/4/22 அன்று இரவு வாணவேடிக்கைகள் தாயில்பட்டி,நாயகி ஃபயர் வொர்க்ஸாரின் கைங்கரியத்தில் நடக்க இருப்பதால் பக்தர்கள் வரும் கார்களை கண்ட இடத்தில் நிறுத்த இயலாது. கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வண்டிகளை நிறுத்த இயலும்.

4. தனியாக பேருந்து மற்றும் மினி வேன்கள் டெம்போ டிரக் அமர்த்தி வருகின்ற அன்பர்கள் தங்களது பேருந்துகளை /வண்டிகளை தாராபுரம்- பொள்ளாச்சி முக்கு ரோட்டில் இருந்து நமது கோவிலுக்கு வரும் வழியில் நமது கோவிலுக்கு சுமார் 200 மீட்டர் முன்பே இடது பக்கமும் வலது பக்கமும் உள்ள பார்க்கிங் லாட்டில் வண்டிகளை பார்க் செய்ய வேண்டும்.

கோவிலுக்குப் பக்கத்தில் தீயணைப்புத் துறையினரின் வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் மட்டுமே நிறுத்த அனுமதி உண்டு. கோவிலுக்குப் பக்கத்தில் பேருந்துகளை கொண்டு வந்தால் திருப்ப இயலாது

5.கும்பாபிஷேகம் முடிந்து அடுத்த நாள் (7-4-22) முதல் 48 நாட்களுக்கு தினமும் காலையில் மண்டல பூஜை நடைபெறும்.கட்டளைதாரர்கள் 5,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பூஜை சாமான்கள் மற்றும் அன்னதானம் கோயிலில் இருந்து ஏற்பாடு செய்யப்படும்.

6. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்..

7 சமைப்பதற்கும், குடிப்பதற்கும் உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலை அணைக்கட்டின் தண்ணீர்தான் உபயோகப்படுத்தப்படும். இது "பேக்கேஜ்டு தண்ணீர்" அல்ல

8.சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் பாட்டிலில்கள், காபி, டீ,வடை, இளநீர், ஐஸ்கிரீம், போன்ற பதார்த்தங்கள், பூஜைக்கு வேண்டிய சாமான்கள் ஸ்டாலில் இருந்து விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. தங்களது தலைக்கட்டு வரி மற்றும் நன்கொடைகளை இதுவரை வங்கி மூலம் கட்டாத அன்பர்கள் இங்கு ரசீது மூலம் பணம் கட்டலாம்.

11.500 ரூபாய்க்குக் கீழே உள்ள அன்னதானம் நன்கொடை, காணிக்கை போன்றவற்றை அதற்கான உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும். 500 ரூபாய்க்கு மேலே உள்ள நன்கொடைகளுக்கு மட்டுமே ரசீது எழுதப்படும்.🍁🍁🍁🍁
12. உங்களது முகவரியில் மாற்றம் இருந்தால் புதிய முகவரி (பெயர், வீட்டு எண், தெருப் பெயர், ஊர் பெயர், போஸ்ட் ஆபீஸ், பின்கோடு நம்பர், வாட்ஸ்அப் நம்பர் ஆகியவைகளுடன் ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி இங்கு வந்து இங்கே உள்ள பெட்டியில் போட வேண்டும்.

13. மொட்டை போடுவதற்கு மேல் கூரையுடன் புதிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொட்டை போடுவதற்கு ரூபாய் 100 செலுத்தி டோக்கன் வாங்கிக் கொள்ளலாம்.

🌻🌻🌻🌻🌻

கோவில் நிர்வாக குழு

30/03/2022

அன்பர்களின் கவனத்திற்கு,

குடமுழுக்கு விழாவிற்கு முக்கியமாக தேவைப்படுவது காசி, ராமேஸ்வரம், திருமூர்த்திமலை, ஸ்ரீரங்கம் போன்ற பல இடங்களிலிருந்தும் உள்ள புண்ணிய நதி தீர்த்தங்கள் ஆகும்.

4/4/2022 திங்கட்கிழமை அதி காலையில் புனித செம்பு குடங்களில்நீர் நிரப்பி பூஜைகள் செய்து,
மந்திரங்களினால் தெய்வத்தன்மை ஏற்றப்பட
உள்ளன.

எனவே முடிந்த அன்பர்கள் 4/4/22க்கு முன்பே தீர்த்தங்களை கோவிலில் வந்து கொடுக்கும்படி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

(இப் புனித நீரினால் தான் சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது. கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் ஒருவர் கோவிலுக்குள் செல்லாமலே கோபுர தரிசனம் மூலமே கடவுளின் அருளைப் பெற இயலும் என்பது இறையாளர்களின் நம்பிக்கை.)

கோவில் நிர்வாக குழு

பௌர்ணமியும் குலதெய்வ வழிபாடும்._ குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ள...
30/03/2022

பௌர்ணமியும் குலதெய்வ வழிபாடும்._

குலதெய்வத்தை பவுர்ணமி நாட்களில் வழிபட்டால் எவ்வளவு நன்மைகள் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குலதெய்வமே நமக்கு எளிதில்அருளைத் தந்தருளும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களும் வேண்டுமெனில், குலதெய்வ வழிபாடு முக்கியம். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது.

குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பெளர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துகிற விசேஷமான நன்னாள்!

மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை விட பெளர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும்.


அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், நம் குலம் சிறக்கும். குடும்பமும் மேன்மை பெறும். குலதெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து நம் குடும்பமும் வம்சமும் காக்கப்படும்.

குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்ததுஅண்ணன்,தம்பி குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசி நமக்கு எளிதாக வந்து சேரும்.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். அதாவது, பிறந்தவீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன்பு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவன் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்குகின்றனர்.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு முறை செய்யும்வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்தபிரச்சினையும் சமாளிக்ககூடிய ஆற்றலைத் தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்தவீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாக் காலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம்.
குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்குச் சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பது என்பது ஐம்பது சதவீதம்தான்.

எனவே குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். அபிஷேகஆராதனைகள் செய்யுங்கள். கோயிலுக்கு முடிந்த அளவுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.

எனவே பங்குனி மற்றும் சித்திரை மாத பெளர்ணமியிலும் மாதந்தோறும் வருகிற பெளர்ணமி அன்றும் மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

பெளர்ணமி தோறும் குலதெய்வ வழிபாட்டைச் செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையும் பெளர்ணமி முழு நிலவுபோல் பிரகாசிக்கும் .

13/08/2021

இன்று ஆடி வெள்ளி.
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி. (ஸ்ரீ சக்ர)

ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி. (ஸ்ரீ சக்ர).

பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும்
உலக முழுதும்என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி. (ஸ்ரீ சக்ர).

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பரமேஸ்வரி. (ஸ்ரீ சக்ர).

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்
அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி. (ஸ்ரீ சக்ர).

20/04/2016

How was the Domain Name SriSiddhammaGudi.org

10/12/2015

Please Suggest Domain Name for அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் ஸ்ரீ பெருமாள்சாமி திருக்கோவில் Pls Comment

13/04/2015

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மன்மத வருடம் நல்வாழ்த்துகள் எல்லாரும் எல்லா வரமும் பெற வேண்டுகிறோம்...........

12/04/2015

நமது கோவிலுக்காக புதிய இனையதளம் துவங்கலாம் என உள்ளோம் தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்.......

21/03/2015

Happy Ugathi to all!

அனைவருக்கும் இனியதைத்திருநாள்நல்வாழ்த்துகள் .எல்லா வளமும்எல்லாரும் பெற எல்லாம் வல்லஇறைவனை வேண்டுகிறோம்...
15/01/2015

அனைவருக்கும் இனிய
தைத்திருநாள்
நல்வாழ்த்துகள் .எல்லா வளமும்
எல்லாரும் பெற எல்லாம் வல்ல
இறைவனை வேண்டுகிறோம்...

Address

Dharapuram
638656, 638657

Telephone

98422 43300

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ சித்தம்மாள் ஸ்ரீ பெருமாள்சாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share